Telangana police cops: ஆபத்தான சூழ்நிலை இருந்தபோதும் உயிரை பணயம் வைத்து ஒருவரின் உயிரை இரண்டு காவல்துறையினர் காப்பாற்றிய சேவை பண்பை பலரும் பாராட்டி வருகின்றனர். 


வெள்ளத்தில் சிக்கி கொண்ட நபர்:


 


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழையானது பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதை பார்க்க முடிகிறது. மேலும் பலர் தங்களது வாழ்விடங்களையும் இழந்து வாடுவதையும் அறிய முடிகிறது. இந்த கனமழையால் சிலர் உயிரிழந்த சோக நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளன.


 


இந்நிலையில், இரண்டு காவலர்கள், தங்களது உயிரையும் பொருட்படுத்தாது, மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில், ஒரு நபரின் உயிரை காப்பாற்றிய சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை காப்பாற்றும் வீடியோவை தெலங்கான காவல்துறையானது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


 






Also Read: Telangana Scientist: அண்ணன் நிச்சயதார்த்தத்திற்கு வந்த பெண் விஞ்ஞானி: வெள்ளத்தில் தந்தையுடன் அடித்துச் செல்லப்பட்ட சோகம்


உயிரை காப்பாற்றிய காவலர்கள்:


அந்த வீடியோவில், நிரம்பி வழியும் ஆற்றில் ஒரு நபர் மாட்டிக் கொள்வதை பார்க்க முடிகிறது. அப்போது இரண்டு காவல்துறையினர் ஆபத்தை உணராமல் நீரோடையின் நடுவில் சென்றனர். அப்போது சமயோசிதமாக யோசித்து, ஒரு காரையும் ஆற்றின் நடுவில் நிறுத்தியிருக்கின்றனர். அப்போது , மேலும் ஒரு காவலர் காரின் கதவை பிடித்துக் கொண்டு, மற்றொரு காவலரை பிடித்திருக்கிறார். அடுத்த காவலர் , மற்றொரு காவலரை பிடிக்க , அந்த காவலர் வெள்ள நீரில் சிக்கி கொண்ட நபரை பிடித்து இழுக்க , அவர் காப்பாற்றப்பட்டார்.


இந்நிலையில், தங்களுக்கு ஆபத்துக்கு இருப்பதற்கான வாய்ப்பையும் உணராமல், சேவையே மாண்பு என கருதி ஒருவரின் உயிரை காப்பாற்றிய காவல்துறையினர் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Viral Video:குடியிருப்பில் நுழைந்த மலைப்பாம்பு.. அடுத்து நடந்த சம்பவம்! வைரல் வீடியோ