• தமிழ்நாடு தினம் ஜுலை மாதம் 18-ஆம் தேதி கொண்டாடப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது என்றும், நவம்பர் ஒன்றாம் தேதியே கொண்டாடப்பட வேண்டும் என்று  எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

  • முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பிலான  புகைப்பட கண்காட்சியை சென்னையில்  இன்று தொடங்கி வைக்கிறார். 

  • சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை முடிந்து  நேற்று வீடு திரும்பினார். 

  • முல்லைப்பெரியாறு அணையில் மத்திய தொழில்படை பாதுகாப்பு அளிக்கக்கோரி நவ-12ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார் .

  • தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. இருப்பினும், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமல்ல என்று  தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.  

  • சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான நேற்று சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு எதிரே அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி மலர் மரியாதை செலுத்தினார்.


இந்தியா: 



  • உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சக்ரதாவில் நடந்த சாலை விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்தனர்.     

  • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளில் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

  • உடல்நலக்குறைவு காரணமாக தில்லி எயிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் நேற்று வீடு திரும்பினார்.

  • டெல்லியில் அனைத்து வகுப்புகளுக்கும் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. 


விளையாட்டு: 


நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நமீபியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  


உலகம்: 



  • இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வந்த ஜி-20 உச்சிமாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டின் நிறைவாக  ரோம் பிரகடனம்  ஏற்றுக் கொள்ளப்பட்டடது.  

  • பருவநிலை மாற்றத்துக்கான ஐ.நா அமைப்பின் (யுஎன்எப்சிசிசி) 26வது சிஓபி-26 மாநாடு இன்று தொடங்குகிறது. நவம்பர்  1ம் தேதி முதல் 2ம் தேதி வரை நடைபெறும் சிஓபி-26 உலக தலைவர்கள் உச்சிமாநாட்டில் 120 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார்.