Breaking News LIVE: முப்படையின் பாசறை திரும்பும் நிகழ்வு கோலாகலமாக தொடங்கியது...

Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 29 Jan 2022 06:15 PM
முப்படையின் பாசறை திரும்பும் நிகழ்வு கோலாகலமாக தொடங்கியது...

டெல்லியில் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படைகளின் பாசறை திரும்பும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். பிரதமர் மோடி, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் பழைய பதவி நீக்கம் செய்யப்படுவர் : மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் பழைய பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்...தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு !

தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, அம்பத்தூர் துணை ஆணையராக இருந்த மகேஷ், ஆவடி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யபட்டுள்ளார். சென்னை அடையாறு காவல் துணை ஆணையராக மகேந்திரன், புதிய தோமையார்மலை காவல் துணை ஆணையராக பிரதீப் நியமிக்கபட்டுள்ளனர். 

கருவுற்ற பெண்கள் பணியாற்ற விதிக்கப்பட்ட தற்காலிக தடை.. உத்தரவை வாபஸ் வாங்கியது எஸ்.பி.ஐ..!

கருவுற்ற பெண்களுக்கு பணி நியமனம் இல்லை என்ற உத்தரவை எஸ்.பி.ஐ வங்கி ரத்து செய்தது. அதேபோல், 3 மாதங்களுக்கு மேல் கருவுற்ற பெண்கள் பணியாற்ற தற்காலிகமாக  தடை விதிக்கப்பட்டிருந்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டது. 

Background

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதியானநிலையில், தனது அண்ணாநகர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.