நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்கள் மறுவாழ்வு பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வமுடையவர். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். இப்போது மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.


மணிப்பூர் மாநிலத்தில் மே 3ஆம் தேதி குக்கி மற்றும் மெய்தி இனக் குழுவினருக்கிடையே தொடங்கிய இன மோதல் வன்முறை சம்பவங்களாக மாறியது. மோதல் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில் மணிப்பூரில் மனித உரிமை மீறல்களும் வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.


எண்ணற்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்து, சமூகங்கள் சிதைந்துள்ளன. இந்நிலையில், திவ்யா சத்யராஜ் இது குறித்து கூறுகையில்,  ”மணிப்பூரில் இடம் பெயர்ந்தவர்களுக்கு நேரடி ஆதரவை வழங்குவதற்கான நம்பகமான வழியைக் கண்டறிய நானும் எனது தோழி காவ்யா சத்தியமூர்த்தியும் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டோம். 

மணிப்பூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான யா-ஆலின் நிறுவனம் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. இதன் நிறுவனர் மனித உரிமைப் பாதுகாவலரான சதாம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக வாதிட்டு, மாற்றத்தின் முன்னணியில் இருந்து வருகிறார். அவருடன் இணைந்து தற்போது மணிப்பூரின் இடம் பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி திரட்டும் பிரசாரத்தை தொடங்கி உள்ளோம்.


இந்தப் பிரசாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு, தங்குமிடம், உடை மற்றும் மிகவும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. நான் இந்த மாதம் இவர்களுக்கு 25 ஆயிரம்  ரூபாய் பங்களித்துள்ளேன். வரும் மாதங்களில் மேலும் வழங்க உள்ளேன். மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த அனைவரும் கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்திய நன்கொடையாளர்களுக்கு வரி விலக்குகள் கிடைக்கும். இந்த முக்கியமான முயற்சிக்கு ஆதரவளிக்க அனைத்து தரப்பினரையும் வேண்டுகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


DA Hike: ஒரு கோடி அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்... விரைவில் அகவிலைப்படி உயர்வு.. மத்திய அரசு அதிரடி திட்டம்..!


Pakistan Train Accident: அச்சச்சோ..! ரயில் கவிழ்ந்து கோர விபத்து, பாகிஸ்தானில் 22 பேர் பலி, 80 பேர் காயம்..