கடந்த 2019ஆம் ஆண்டு மோடியின் குடும்பப் பெயரைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2 ஆண்டு தண்டனை ரத்து தொடர்பான மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் மே 3ம் தேதி விசாரிக்கிறது. ஆனால் ஜாமீன் நீட்டிப்பு மற்றும் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளார். இந்த ரத்து மனு மே 3ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக ராகுல் காந்தி தனது எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது அதிகாரப்பூர்வ இல்லமான பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது இங்கிருந்து தனது அலுவலகத்தை மாற்றும் பணியில் ராகுல் ஈடுபட்டுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு வருமாறு கேட்டபோதும், ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்தியின் 10, ஜன்பத் வீட்டிற்கு மாறவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



அலுவலகத்திற்கு வேறு வீடு தேடும் ராகுல்


ராகுல் பங்களாவில் உள்ள உடமைகள் சோனியா வீட்டிற்கு மாற்றப்படுவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதுதவிர அலுவலகத்திற்கு வேறு வீடு தேடி வருவதாகவும் தெரிகிறது. பங்களாவை காலி செய்யுமாறு மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்த ராகுல், "நான் இந்த பங்களாவில் 2004 முதல் வசித்து வருகிறேன். இந்த வீட்டைப் பற்றி எனக்கு நிறைய நினைவுகள் உள்ளன. ஆனால் உங்கள் கடிதத்தின்படி நான் விரைவில் காலி செய்கிறேன்" என்று எழுதியிருந்தார்.


தொடர்புடைய செய்திகள்: Watch Video: “உங்களை பார்க்கணும்ன்னு தோணுச்சு.. அதான் வந்தேன்”.. விஜய் சேதுபதியை சந்தித்த குழந்தை..வைரலாகும் வீடியோ..!


தன் வீட்டிற்கு அழைத்த கார்கே


இந்த கடிதத்தை எழுதிய உடனேயே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். ராகுலை அவர் விரும்பினால் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ராகுலுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நேரடியாக அவரது வீட்டுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது. அவருக்காக அவரது வீட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்வதாக கூறினார்.



ராகுல் காந்தியின் மேல்முறையீடு வழக்கு


அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஜாமீனை சூரத் அமர்வு நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ததால், அடுத்த விசாரணையை ஏப்ரல் 13ஆம் தேதிக்கு சூரத் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2019 ஆம் ஆண்டு போடப்பட்ட அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அடைந்தார். ராகுலுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முதல்வர்கள் பூபேஷ் பாகேல், சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் உடன் இருந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு சென்ற ராகுல் காந்தி, தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். வழக்கு முடிவுகள் வரும் முன் எம்பி பதவி பறிபோனதால் அரசாங்க பங்களாவை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் உள்ளார்.