PM Modi: 'இதய ஆரோக்கியத்திற்கு சக்ராசனம் செய்யுங்கள்' நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!

அர்த்த சக்ராசனம் அல்லது அரைச்சக்கர நிலை யோகாசனம் குறித்த காணொலியை பிரதமர் நரேந்திர மோடி இன்று பகிர்ந்தார்.

Continues below advertisement

அர்த்த சக்ராசனம் அல்லது அரைச் சக்கர நிலை குறித்த காணொலியை இன்று பகிர்ந்துகொண்ட பிரதமர்  நரேந்திர மோடி, சீரான இருதய செயல்பாடு மற்றும் மேம்பட்ட இரத்த ஓட்டத்திற்கு பொதுமக்கள் இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Continues below advertisement

சர்வதேச யோகா தினம்:

10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பகிரப்பட்ட இந்தக் காணொலியில், நின்ற நிலையில் செய்யப்படும் இந்த ஆசனத்தின் வழிமுறைகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

யோகாசனம் செய்த பிரதமர்:

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது, "நல்ல ஆரோக்கியத்திற்கு சக்ராசனத்தைப் பயிற்சி செய்யுங்கள். இது இதயத்திற்கு நல்லது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது" என்றார். யோகாவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, 10வது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்கு இடமின்றி, உடல், மனம் மற்றும் ஆவி ஆகியவற்றை யோகா சமநிலையில் கொண்டு வருகிறது. யோகா என்பது ஒரு குறிப்பிட்ட உணவை உட்கொள்வது, ஒரு குறிப்பிட்ட உடல் தோரணையை வைத்திருப்பது, சுவாச நுட்பங்களைப் பயிற்சி செய்வது போன்ற உடற்பயிற்சியின் ஒரு வடிவமாகும்.

சர்வதேச யோகா தினம்: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி, யோகா ஸ்டூடியோக்கள் அல்லது பிற பொது இடங்களில் ஒன்றாக யோகா பயிற்சி செய்வதற்காக மக்கள் கூடுகிறார்கள். யோகாவின் பல நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு, செப்டம்பர் 27ஆம் தேதி, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது சர்வதேச யோகா தினம் பற்றிய திட்டங்களை முதன்முதலில் பிரதமர் மோடி முன்வைத்தார்.

யோகா ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு நன்மை பயக்கும். உடல் மற்றும் மனதின் சரியான செயல்பாட்டில் யோகா கவனம் செலுத்துகிறது. மக்கள் மிகவும் நெகிழ்வாகவும் வலுவாகவும் வைக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நம்பிக்கையை அதிகரிக்கவும் யோகாசனங்கள் உதவுகின்றன.

யோகா ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். கவலைகள், பிரச்னைகள் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து வெளியே வர யோகா உதவலாம். உடல், ஆன்மா மற்றும் மனம் ஆகியவற்றின் இணக்கத்தை யோகா பராமரிக்கிறது.

இதையும் படிக்க: PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?

Continues below advertisement
Sponsored Links by Taboola