News Today LIVE : தமிழ்நாட்டில் 1,164 பேருக்கு கொரோனா தொற்று.. 20 பேர் உயிரிழப்பு!

ஷாருக்கானைப் பார்க்க ஒரு பெரிய கூட்டமே காத்திருந்தது. சிறையில் இருந்து வெளிவரும் போது அனைவரையும் பார்த்து ஒரு கும்பிடு வைத்து வந்தார்

ABP NADU Last Updated: 21 Oct 2021 08:48 PM
தமிழ்நாட்டில் 1,164 பேருக்கு கொரோனா தொற்று 20 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் 1,164 பேருக்கு கொரோனா தொற்று 20 பேர் உயிரிழப்பு!

ஸ்விக்கி, சொமேட்டோ மூலமாக சுற்றுலாத்துறை உணவகங்களில் உணவுகளை விற்பனை செய்யத்திட்டம்..

300 சுற்றுலா தளங்களில் சர்வதேச தரத்துக்கு இணையான வசதிகளை ஏற்படுத்த தேவையான பெருந்திட்டம் தயாரிக்க முடிவு - அமைச்சர் மதிவேந்தன்

Background

ஆர்யன் கான், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் மகன். செலிப்ரிட்டி கிட் என்ற அந்தஸ்தில் வலம் வந்தவர் இப்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைபட்டிருக்கிறார். கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கைதானார் ஆர்யன் கான். அவருடன் கார்டீலியா சொகுசுக் கப்பலில் இன்னும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். 


ஒரு முறை இரண்டு முறை அல்ல பலமுறை ஜாமீன் கோரியும் ஜாமீன் கிடைக்கவில்லை. இன்னும் 5 நாட்களுக்கு அவருக்கு சிறைவாசம் தான். இந்நிலையில் இன்று ஆர்யன் கானை அவரது தந்தை ஷாருக்கான் சந்தித்தார்.
மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலைக்கு வந்த அவர் மகனைப் பார்க்க வெறும் 18 நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. அந்த 18 நிமிடங்கள் முடிந்து வெளியே வந்த ஷாருக்கான் அமைதியாக இருந்தார். அமைதி என்பதைவிட இறுக்கம் என்றே கூற வேண்டும். .


ஷாருக்கானைப் பார்க்க ஒரு பெரிய கூட்டமே காத்திருந்தது. சிறையில் இருந்து வெளிவரும் போது அனைவரையும் பார்த்து ஒரு கும்பிடு வைத்து வந்தார்




 


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.