மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து போராடிவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தார். 


முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையை அடுத்து நீட் விலக்கு கோரி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.


இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் முடிந்திருக்கும் சூழலில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே ஆளுநர் ஆர்.என். ரவி இன்று திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமிளத்துள்ளது.


 






இந்த சூழலில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், இதுதொடர்பாக பிப்ரவரி ஐந்தாம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டுமென திமுக மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.  மாநிலங்களவை செயலாளரிடம் திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா இந்த நோட்டீஸை வழங்கினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ”ஏற்க முடியாது; அன்றே அண்ணா ஆளுநரைப்பற்றி சொன்னார்....” - நினைவு கூறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்


25 ஆண்டுகளுக்குப் பிறகு தோழிகளுடன் சந்திப்பு.. மகிழ்ச்சியில் திளைத்த 130 பெண் போலீசார்!