பொது விவகார குறியீடு 2021: தமிழகம் இரண்டாமிடம்; ஐந்தாவது வருடமாக முதலிடத்தில் கேரளா!

நிர்வாகம், நலத்திட்டங்களின் அடிப்படையிலான பொது விவகார குறியீட்டில், இந்திய அளவில் கேரளா முதலிடத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடமும் பெற்றுள்ளது.

Continues below advertisement

நிர்வாகம், நலத்திட்டங்களின் அடிப்படையிலான பொது விவகார குறியீட்டில், இந்திய அளவில் கேரளா முதலிடத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடமும் பெற்றுள்ளது.இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களின் ஆட்சி நிர்வாகத் திறமை, மக்கள் நலத்திட்டங்களின் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பொது விவகாரக் குறியீடு (PAI–Public Affairs Index) எனும் தர குறியீடு கடந்த 5 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சி, சமத்துவம், நிலைத் தன்மை ஆகிய மூன்று விஷயங்களின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்படும். பெங்களூரில் உள்ள ‘Public Affairs Centre’ என்ற தனியார் அமைப்பு, இந்த அறிக்கையை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில், மாநில அரசுகளை கவனமாக ஆராய்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. இதில் முதல் வருடத்தில் இருந்து இப்போது வரை கேரளாதான் அதிக PAI புள்ளிகளை பெற்று முதலிடம் வகித்து வருகிறது. அந்த வகையில் இந்த முறையும் கேரளா 1.618 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 2 ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த முறையும் 0.897 புள்ளிகளோடு 2 வது இடத்தை தக்க வைத்திருக்கிறது. 3 வது இடத்தில் தெலுங்கானா மாநிலம் 0.897 புள்ளிகளோடு உள்ளது.

Continues below advertisement

மற்ற இடங்களை பெற்ற மாநிலங்களில் விவரங்கள்: 0.872 புள்ளிகள் பெற்று சட்டீஸ்கர் மாநிலம் 4 வது இடத்தை பிடித்துள்ளது. 0.782 புள்ளிகள் பெற்று குஜராத் 5 வது இடம் பெற்றுள்ளது. 0.643புள்ளிகள் பெற்று பஞ்சாப் 6வது இடத்தில் உள்ளது. கர்நாடகா 0.121 புள்ளிகள் பெற்று 7வது இடம் பிடித்துள்ளது. ஆந்திர பிரதேசம் 0.077 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களுக்குள் 5 தென்னிந்திய மாநிலங்கள் வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. சிறிய மாநிலங்களில் சிக்கிம் 0.907 புள்ளிகளோடு முதலிடம் பிடித்துள்ளது. யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் புதுச்சேரி மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.

உத்தர பிரதேசம் இதில் கடைசி இடம் பிடித்துள்ளது. -1.418 புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி இடத்தை உத்தர பிரதேசம் பிடித்துள்ளது. இந்தியாவில் மோசமான ஆட்சி நிர்வாகம் கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் இந்த புள்ளிகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமத்துவம், நிலையான தன்மை ஆகியவை மிக குறைவாக உள்ளதால் உத்தர பிரதேசம் இதில் பின்னடைவை சந்தித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் அடுத்த வருடம் தேர்தல் நடக்க உள்ளது. இங்கு மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. இந்த நிலையில் தரவரிசை பட்டியலில் உத்தர பிரதேசம் கடைசி இடத்தை பெற்றுள்ளது. கடந்த வருடம் கடைசிக்கு முந்தைய இடத்தை பெற்ற உத்தர பிரதேசம் இந்த முறை கடைசி இடத்தை பெற்றுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola