மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.