அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிக் டேட்டா அண்ட் டேட்டா சயின்ஸ் நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைந்துள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கான பிக் டேட்டா மற்றும் டேட்டா சயின்ஸ் (UN-CEBD) பற்றிய ஐநா நிபுணர்களின் குழு, பிக் டேட்டாவின் நன்மைகள் மற்றும் சவால்களை மேலும் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டது. இதில், நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணித்து அறிக்கையிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும்.

Continues below advertisement

இந்தியாவுக்கே பெருமை:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் கவுன்சிலில் இந்தியா சமீபத்தில்தான் உறுப்பினராக சேர்ந்தது. இந்த சூழலில், இந்த நிபுணர் குழுவில் இந்தியா இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நிபுணர்கள் குழுவில் இந்தியா இடம்பெற்றிருப்பது, நாட்டின் புள்ளியியல் சூழலுக்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.

Continues below advertisement

ழுவின் ஒரு பகுதியாக, அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நோக்கங்களுக்காக பிக் டேட்டா அண்ட் டேட்டா சயின்ஸை பயன்படுத்துவதில் உலகளாவிய தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை வடிவமைப்பதில் இந்தியா பங்களிக்கும். இந்த மைல்கல், உலகளாவிய புள்ளிவிவர சமூகத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தகவலறிந்த முடிவெடுப்பதற்கு தரவு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களுக்கான பிக் டேட்டா அண்ட் டேட்டா சயின்ஸ் நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைவது, புள்ளியியல் உற்பத்தி மற்றும் பரவலில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு படியாகும்.

 

இந்த அங்கீகாரம், தரவு சார்ந்த முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும். உலகளாவிய புள்ளிவிவர நடைமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவின் திறனை வலுப்படுத்தும்.

இதையும் படிக்க: TN Assembly CM Stalin: ஸ்டாலின் பஸ்.. சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - அப்பா..அப்பா.. கண் கலங்கினார்!