தமிழ்நாடு:



  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அமைதியாக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை 

  • தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, காலை 7.15 மணி அளவில் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடிகர் விஜய் வாக்குச்சாவடி வந்தடைந்தார்

  • தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2,குரூப் 2 ஏ பதவியில் 5529 பணியிடங்களுக்கு மே 21-ல்தேர்வு : டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவிப்பு 

  • இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு

  • கூடங்குளத்தின் அனுக்கழிவு சேமிக்கும் இடத்தை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

  • 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வயது வரம்பில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்


இந்தியா :



  • அகமதாபாத்  தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 11 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

  • கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், பிப்ரவரி 21-ம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைப்பு என சபாநாயக்கர் அறிவித்தார்

  •  புதுச்சேரி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்குகிறது

  • திருச்சியில் இருந்து திருப்பதிக்கு மார்ச் 29-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

  • சீக்கிய தலைவர்களுக்கு தனது இல்லத்தில் பிரதமர் மோடி விருந்தளித்தார்

  • பங்குச்சந்தை ரகசியங்களை வெளியில் தெரியப்படுத்தியதற்காக தேசிய பங்குச்சந்தை முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உலகம்:



  • தென்கொரியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு. ஒரே நாளில் 45 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

  • உக்ரைன் எல்லையில் அதிக அளவில் குவிக்கப்படும் ரஷ்ய படைகள். 1 லட்சத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது

  • பிரேசில் நாட்டில் தொடரும் கனமழை, நிலச்சரிவால் 130 பேர் உயிரிழப்பு

  • போர்ச்சுகலில் ஏற்பட்ட கப்பல் தீ விபத்தில் ஏராளமான கார்கள் தீயில் எரிந்து சாம்பல்


விளையாட்டு:



  • இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது

  • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2 வெற்றிகளுடன் முன்னிலை பெற்றிருக்கும் இந்திய அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண