தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க வரும் வாரம் டெல்லி பயணப்படுவார் என தகவல் வெளியாகி வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா சூழல், மருந்து மற்றும் ஆக்சிஜன் தேவைகள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் தேவை மற்றும் மருந்துகளின் மீதான ஜி.எஸ்.டி. விலக்கு ஆகியன குறித்து ஏற்கெனவே பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டில் புதிய அமைச்சரவைப் பதவியேற்ற பிறகான முதல் சந்திப்பாக இது இருக்கும்.



Also Read: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். எம்.பி-க்களின் ஒரு மாத ஊதியம் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்