பிரதமர் மோடியின் முயற்சியால் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் நடத்த முடிந்தது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். 


44வது, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி குஜராத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். பின்னர் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.  தொடக்க விழா நிகழ்ச்சியில் சதுரங்க கரை வேட்டி மற்றும் சட்டையில் மோடி பங்கேற்றார்.


செஸ் ஒலிம்பியாட் விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துறைமுருகன், எம்பி தயாநிதிமாறன், டிஆர்.பாலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.



உற்சாக வரவேற்பு:


செஸ் ஒலிம்பியாட் விளையாட வரும் வீரர்களுக்கு தப்பாட்டம், கரகாட்டம், காவடி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.





பட்டு வேட்டியில் முதலமைச்சர்:


தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் பட்டு வேட்டி மற்றும் பட்டு சட்டையில் பங்கேற்றார். துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த மற்றும் அவரது மகள் சௌந்தர்யா, நடிகர் கார்த்தி,  மற்றும் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.





பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள்:


செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ஒடிசி, கேரளாவின் கதகளி மற்றும் மோகினி ஆட்டம் ஆகிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.


நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். கமல்ஹாசன் பின்னனி குரலில் தமிழகத்தின் பாரம்பரியம் குறித்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. 


நிகழ்ச்சியில் பேசிய் அமைச்சர் மெய்யநாதன், “பிரத்மர் மோடியின் முயற்சியால் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படுகிறது” என புகழாரம் சூட்டினார். 



 






 


Also Read: Chess Olympiad 2022 Chennai LIVE Updates: செஸ் ஒலிம்பியாட் தொடரில் அடுத்தடுத்து நடக்கவுள்ள நிகழ்வுகளை கீழே காணலாம்