Breaking News LIVE: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - மேலிட பார்வையாளர்கள் நியமனம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 14 May 2023 10:04 PM
போதை பொருள் கடத்தல் தடுப்பு - ரோந்து அதிகரிப்பு

தமிழகத்திற்குள் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதை தடுக்க கடலோர காவல் குழுமத்தின் ரோந்து அதிகரிக்கப்படும் - காவல்துறை தலைமை இயக்குநர்

கள்ளச்சாராயம் - உயிரிழப்பு 6 ஆக உயர்வு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னாங்கட்டி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடக்கம்..!

கர்நாடக முதலமைச்சரை தேர்வு செய்ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது.

Breaking News LIVE : பிரதமர் மோடியுடன் வால்மர்ட் நிறுவன சிஇஓ சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டக் மெக்மில்லன் சந்தித்தார்.

Breaking News LIVE:28 வயதுப் பெண் கொலையான வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம்

  நாமக்கல் அருகே ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதுப் பெண் கொலையான வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Breaking News: கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்?

கர்நாடகாவின் புதிய முதலமைச்சருக்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ சந்திப்புக்கு இன்னும் சில நிமிடங்களில்  நடக்க இருக்கின்றன

சிபிஐ இயக்குநராக கர்நாடக காவல்துறை தலைவர் பிரவீன் சூட் நியமினம்..!

சிபிஐ இயக்குநராக கர்நாடக காவல்துறை தலைவர் பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Breaking News LIVE : கள்ளச்சாராயம் அருந்திய மேலும் ஒருவர் உயிரிழப்பு

விழுப்புரம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Breaking News LIVE: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - மேலிட பார்வையாளர்கள் நியமனம்

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் 3 மேலிட பார்வையாளர்கள் நியமனம் - சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா,பன்வார் ஜிதேந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமைக்கு அறிக்கை அளிப்பார்கள். 

Breaking News LIVE: 10 மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

வேலை செய்யாதவர்களுக்கு திமுகவில் இடமில்லை என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் எனவும் 10 மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Breaking News LIVE: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு 

Breaking News LIVE: கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலியான சம்பவம் - 2 காவல்துறை ஆய்வாளர்களை பணியிடை நீக்கம்

மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலியான சம்பவம்:- மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மரியா சோபி உள்ளிட்ட 2 காவல்துறை ஆய்வாளர்களை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவு.

Breaking News LIVE: கார்கேவுடன் சித்தராமையா சந்திப்பு

பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சந்திப்பு 

Breaking News LIVE: கர்நாடகாவில் இன்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளது - இதில் முதலமைச்சர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என கூறப்படுகிறது.

Breaking News LIVE: பிளவக்கல் அணைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிளவக்கல் அணைப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தல் - அணைப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமிருப்பதாக எச்சரிக்கை

Breaking News LIVE: திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளித்தவர் பலி

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் குளித்த ஒருவர் பலி - ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரை தேடும் பணி தீவிரம்

Breaking News LIVE: கள்ளச்சாராயம் அருந்திய 3 பேர் பலி - பொதுமக்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். சாராயம் விற்பனை செய்த அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குப்பம் மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Breaking News LIVE: அன்னையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அன்னையர் தினத்தை முன்னிட்டு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், “உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!” என தெரிவித்துள்ளார். 

Background

சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி  விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம். 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.14) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 358வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.