Breaking LIVE: கட்சியின் பொறுப்புகளில் இருந்து சூர்யா சிவா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட்-அண்ணாமலை அறிவிப்பு

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 24 Nov 2022 09:30 PM
"பொறுப்புகளில் இருந்து சூர்யா சிவா சஸ்பெண்ட்"

பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து அக்கட்சியின் ஓபிசி பிரிவு பொதுச் செயலர் சூர்யா சிவாவை  மாநிலத் தலைவர் அண்ணாமலை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

யானைகள் பாதுகாப்பு- தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கஞ்சிக்கோடு - வளையாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கி.மீ வேகத்திலேயே இயக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் மத அரசியல் கூட்டங்களை நடத்தக்கூடாது - மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்ககம்..

தனியார் பள்ளிகளில் மத அரசியல் கூட்டங்களை நடத்தக்கூடாது - மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்ககம்..

தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா

எஸ் ஆர் எம் பல்கலை வளாகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ் பேராய விருதுகளை வழங்கினார் பாரிவேந்தர்

2001ம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத அனுமதி

2001 முதல் 2002ம் ஆண்டு முதல் அரியர் வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அடுத்த 3 மணி நேரத்தில் மழை

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் 

போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை : டிசம்பர் 2-ந் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை..!

போக்குவரத்து தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை குறித்து வரும் டிசம்பர் 2-ந் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் காலமானார் - தொண்டர்கள் சோகம்

சென்னை மாநகராட்சி 165-வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாஞ்சில் பிரசாத் இன்று அதிகாலையில் காலமானார்.

Background

தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 187வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 







சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 180 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.

 

பெட்ரோல், டீசல் விலை:

















கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.














இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.









இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 



















 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


2025 இலக்கு:


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.