Breaking News LIVE: தேர்தலுக்காக மட்டுமல்ல.. ஜனநாயகத்தை காக்கவும் இந்த கூட்டணி தொடரவேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 01 Jun 2023 06:28 PM
Breaking News LIVE: சேலம் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து - 3 பேர் உயிரிழப்பு!

சேலம் அருகே உள்ள பட்டாசு குடோனில் பட்டாசு  வெடித்து உரிமையாளர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.  6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Breaking News LIVE : சென்னை வந்தடைந்தார் கெஜிர்வால் - சற்று நேரத்தில் முதல்வருடன் சந்திப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால் சென்னை வந்தடைந்துள்ளார். 

Breaking News LIVE : புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார் சீமான்

புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Breaking News LIVE: சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் தீ விபத்து

சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Breaking News LIVE: கரூரில் 7வது நாளாக நீடிக்கும் வருமானவரி சோதனை

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் 7வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

ராமநாதபுரம்: கடலில் வீசிய தங்கத்தை தேடும் பணி தீவிரம்.. 2 வது நாளாக தேடும் பணிகள் தொடர்கிறது..

ராமநாதபுரம்: நடுக்கடலில் கடத்தல்காரர்களால் வீசப்பட்ட தங்க கட்டிகள் கொண்ட பார்கல்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் 8 பேர், முத்து எடுக்கும் தொழிலாளர்கள் 5 பேர் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. 15 பேர் கொண்ட குழுவினர் நவீன கருவிகளை கொண்டு 2 வது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மன்னார் வளைகுடா பகுதியில் காற்று வேகம் அதிகமாக இருந்ததால் தேடும் பணியில் தோய்வு ஏற்பட்டது. 

மேகதாது பிரச்சணை: கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்...

மேகதாது அணை கட்ட உத்தரவிட்ட கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பன்மாநில நதிநீர் தாவா சட்டப்படி நீரை தடுக்க, திருப்ப எந்த மாநிலத்திற்கும் அதிகாரம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். 

Breaking News LIVE: சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்

Breaking News LIVE: கேரளாவில் ரயிலில் திடீர் தீ விபத்து - போலீசார் விசாரணை

கேரள மாநிலம் கண்ணூரில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து - பின்புறம் உள்ள 3 பெட்டிகள் தீ பரவிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை 

Breaking News LIVE: 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - மக்கள் மகிழ்ச்சி 

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Breaking News LIVE: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி 

பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலை கோயிலுக்கு இன்று முதல் 4 நாட்கள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி 

Breaking News LIVE: வணிக சிலிண்டர் விலை ரூ.84 குறைந்தது

வணிக பயன்பாட்டிற்கான வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.84 குறைந்தது. தற்போது ரூ.2,021ல் இருந்து ரூ.1,937க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 

Background

Petrol, Diesel Price: ஜூன் மாதம் பிறந்துள்ள நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம். 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 1) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 376 நாட்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.