Breaking News LIVE Tamil : தமிழ்நாட்டில் அடுத்த 7 நாளைக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

ஆர்த்தி Last Updated: 29 Jul 2023 02:48 PM
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாளைக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாளைக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் 

கிருஷ்ணகிரி வெடி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு

கிருஷ்ணகிரியில் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

கிருஷ்ணகிரி வெடி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு

கிருஷ்ணகிரியில் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

கிருஷ்ணகிரி விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு

கிருஷ்ணகிரி விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு

கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு விபத்து : உயிரிழப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்வு

கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு விபத்து : உயிரிழப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்வு

Breaking News LIVE Tamil : ஆகஸ்ட் 1ம் தேதி அரங்கேறும் அதிசயம்.. ஒரே மேடையில் அமர இருக்கும் சரத் பவார் - பிரதமர் மோடி!

லோகமான்ய திலகரின் 103வது நினைவு தினமான ஆகஸ்ட் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருதை வழங்கவுள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக சரத் பவார் கலந்துகொள்ள இருக்கிறார். 


 

தமிழ்நாட்டில் இன்று கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படுகிறது..

தமிழ்நாட்டில் இன்று மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் மொஹரம் பண்டிகை முன்னிட்டு இன்று தமிழ்நாட்டில் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தொடர்ந்து உயரும் தக்களியின் விலை.. சதமடித்த பீன்ஸ்.. விழிபிதுங்கும் மக்கள்..

தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக உச்சத்தில் உள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ள காரணத்தால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று  ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ பீன்ஸ் 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதிகாலையிலே ராமநாத சுவாமி கோயிலுக்கு சென்ற அமித்ஷா.. இன்றைய பயணத்திட்டம் என்ன? முழு விவரம்..

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 9 ஆண்டுகள் பாஜக செய்த சாதனையை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரத்தில் தொங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இன்று காலை சுமார் 5.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். 

இன்று மணிப்பூர் விரையும் 20 பேர்கொண்ட எம்.பிக்கள் குழு.. கள நிலவரத்தை ஆய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு..

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும், அங்குள்ள சூழல் தொடர்பாகவும் அறிந்து கொள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூருக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, களநிலவரம் தொடர்பாக அறிய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் இரண்டு நாள் பயணமாக இன்று 20 எம்.பிக்கள் மணிப்பூர் செல்கின்றனர். 

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 29) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 434வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.