Breaking News LIVE: உலக செஸ் தரவரிசை.. தமிழக வீரர் குகேஷ் 7வது இடம்

Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 12 Aug 2023 09:08 PM
உலக செஸ் தரவரிசை.. தமிழக வீரர் குகேஷ் 7வது இடம்

செஸ் வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் உலக அளவில் தமிழ்நாடு வீரர் குகேஷ் 7வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

Breaking News LIVE: அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி  நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: நாங்குநேரி சம்பவம் - முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியில் இறந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.   

Breaking News LIVE: நீட் விலக்கிற்கு அழுத்தம் தர திமுக தவறிவிட்டது - அதிமுக

நீட் தேர்வில் விலக்கு பெற மத்திய அரசுக்கு அழுத்தம் தர திமுக தவறிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்


செந்தில் பாலாஜி வழக்கில் 3000 பக்க ஆவணங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

Breaking News LIVE: புழல் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி

நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டதை அடுத்து, புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார் செந்தில் பாலாஜி

Breaking News LIVE: செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை உட்பட 3,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அமலாக்கத்துறை  தாக்கல் செய்துள்ளது.

Breaking News Live: செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Breaking News LIVE: ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல்

செந்தில் பாலாஜியிடம் ஐந்து நாட்கள் விசாரணை முடிந்து நிலையில், சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் ஐந்து நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரிய நிலையில், நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீட்டித்தது நீதிமன்றம்.

Breaking News LIVE: நாங்குநேரி சம்பவம் - ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சாதி, இன உணர்வால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்க வழிமுறைகள் வகுக்க ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.





 

Breaking News Live: 5 நாள்கள் கஸ்டடி கேட்டு அமலாக்கத்துறை மனு

மேலும், 5 நாள்கள் காவல் கோரி அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Breaking News Live: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி

சென்னை பெருநகர நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். 

Breaking News Live: செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடிவு

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Breaking News LIVE: நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜியை நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்கின்றனர் அமலாக்கத்துறை.

”நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன்” - ஆளுநர் ரவி பளீர் பதில்

 “நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை குறைத்து விடும். எனவே அது தொடர்பான மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன். நீட் தேர்வுக்கு கோச்சிங் செண்டர் சென்று பயில வேண்டிய அவசியம் இல்லை. பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்தும்போது மாணவர்களை நிர் தேர்வுக்கு தயார் செய்யலாம்.  நீட் தேர்வுக்குப் பின்னரே மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர். கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் நீட் விலக்கு தொடர்பான மசோதாவ குடியரசு தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன்” என பேசியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி

Cauvery Water : எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை.. - கர்நாடக முதல்வர் சித்தராமையா

Cauvery Water : எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை.. - கர்நாடக முதல்வர் சித்தராமையா..


மிகக்குறைவாகவே மழை பெய்துள்ளதால் எங்களிடம் போதிய அளவிலான தண்ணீர் இல்லை.. கர்நாடக அரசு தண்ணீரை திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு முறையிடும் வேளையில் முதல்வர் சித்தராமைய்யா விளக்கம்..

Breaking News LIVE: சென்னையில் பொடி தக்காளி கிலோ ரூ. 20 க்கு விற்பனை..!

சென்னை கோயம்பேடு சந்தையின் கிலோ ரூ. 45க்கும், பொடி தக்காளி கிலோ ரூ.20 க்கு விற்பனையாகிறது.

Breaking News LIVE: செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்..!

செந்தில் பாலாஜியை இன்று மாலை 4 மணிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது அமலாக்கத்துறை.

Nanguneri Incident : நாங்குநேரி சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவரின் தாயாரிடம் ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

சக மாணவர்களால் நாங்குநேரி சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவரின் அம்மாவிடம் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.

சாதி பெருமை உடை.. சாதி அடையாள கயிறு.. சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்.. இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்
நாங்குநேரி சம்பவம் : மேலும் ஒரு சிறுவன் கைது..

நாங்குநேரி சம்பவம் : மேலும் ஒரு சிறுவன் கைது.. ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு சிறுவன் கைது

Breaking News LIVE: கடலூரில் மீண்டும் 20 ரூபாய்க்கு தக்காளி விற்பனை..!

கடலூர் சாலகரை பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ. 20 ரூபாய்க்கு விற்பனை  நீண்ட வரிசையில் காத்திருந்து தக்காளிகளை வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.


நபர் ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுவதாக வியாபாரி அறிவிப்பு.

Breaking News LIVE: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி இறுதிப்போட்டி : இந்தியா - மலேசியா இன்று பலப்பரீட்சை

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் இன்று மோதுகின்றன. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் 4வது முறையாக கோப்பையை வெல்லும். 

Breaking News LIVE: 18வது நாளாக என்.எல்.சி தொழிலாளர்கள் போராட்டம்..!

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 18வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல் 


 

Breaking News LIVE: 448வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!

சென்னையில் 448வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63, டீசல் ரூ.95.24க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 12) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 448வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.