ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் மத்திய அரசின் ஆயுதத் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூர் அருகே உள்ள இந்த தொழிற்சாலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது

Continues below advertisement

மகாராஷ்டிரா ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continues below advertisement

மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் மத்திய அரசின் ஆயுதத் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூர் அருகே உள்ள இந்த தொழிற்சாலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது.

ஆர்.டி.எக்ஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பதப்படுத்தப்படும் தொழிற்சாலைப் பிரிவில் வெடிப்பு நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடெட்டிவார் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. காலை 10:30 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். வெடிப்பின் சத்தம் கிட்டத்தட்ட 5 கி.மீ தூரத்திற்கு கேட்டது. பந்தாரா அருகே அமைந்துள்ள ஜவஹர்நகர், ஒரு பாதுகாப்பு உற்பத்தி நிறுவனத்தின் தாயகமாகும்.

வெடிப்பு ஏற்பட்ட கட்டிடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவல் அறிந்து தொழிற்சாலை, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் கட்டிடத்தில் ஏழு முதல் எட்டு தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதுகுறித்து பேசிய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், “வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியில் உயர் அதிகாரிகள் உள்ளனர். மீட்பு குழுக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ குழுவும் தயாராக உள்ளது.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola