Breaking News LIVE:விருதுநகரில் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 25 Feb 2024 08:09 PM
விருதுநகரில் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதத்தின் பெயரால் பா.ஜ.க. அரசியல் செய்கிறது - சி.வி.சண்முகம்

மதத்தின் பெயரால் பா.ஜ.க. அரசியல் செய்கிறது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க. - மார்க்சிஸ்ட் மக்களவைத் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

தி.மு.க. - மார்க்சிஸ்ட் கட்சிகள் இடையே மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கொள்ளிடம் ஆற்றில் 3 மாணவர்கள் சடலமாக மீட்பு - திருச்சியில் பெரும் சோகம்

கொள்ளிடம் ஆற்றில் மூன்று மாணவர்களை சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால், ஏனாமில் ஜிப்மர் மருத்துவமனை திறப்பு

காரைக்கால் மற்றும் ஏனாமில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

திருவருப்பூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 32 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருவருப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 32 பேர் காயம் அடைந்தனர்.

ஜாஃபர் சாதிக்கை நீக்கிய திமுக; பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சினிமா தயாரிப்பாளரும், திமுக  சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக், கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் அவரை திமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இதனை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியின் ராஜினாமா ஏற்பு!

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியின் ராஜினாமாவை சபாநாயகர் அப்பாவு ஏற்று கொண்டார்.

Breaking News LIVE:மக்களுக்காக ஓடோடி வந்தவர் கனிமொழி - முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் 

தமிழ்நாடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவுக்கு நாடாளுமன்றத்தில் கர்ஜனை குரல் கொடுத்தவர் கனிமொழி. தூத்துக்குடியில் மழை வெள்ளம் என்றவுடன் ஓடோடி வந்து மக்கள் பணியாற்றியவர் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

Breaking News LIVE: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இரண்டாவது இன்னிங்ஸில் திணறும் இங்கிலாந்து

இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களும், இந்திய அணி 307 ரன்களும் எடுத்தது. 46 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. 

அரைசதம் விளாசிய ஜுரெல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் துருவ் ஜுரெல் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். 

100 ரன்கள் பின்தங்கியுள்ள இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. தற்போது வரை இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து, 253 ரன்களை சேர்த்து, 100 ரன்கள் பின் தங்கியுள்ளது.

கேபிள்களால் தாங்கப்படும் நாட்டின் நீளமான பாலம்

ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும், கேபிள்களால் தாங்கப்படும் இந்தியாவின் மிக நீளமான  பாலமான சுதர்சன் சேதுவை பிரதமர்  மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். இந்த பாலம் பாலம் 2.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது.

Background

கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 24ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 644வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.