Breaking News LIVE: கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 201.67 கோடி நிவாரண நிதி- அரசு அரசாணை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 24 Feb 2024 08:58 PM
கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 201.67 கோடி நிவாரண நிதி- அரசு அரசாணை

கடந்த டிசம்பர் மாதம் கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 201.67 கோடி நிவாரண நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 

சசிகலா வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை

போயஸ்கார்டனில், சசிகலா புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை புரிந்தார். 

திமுக கூட்டணியில் நாமக்கல்லில் களமிறங்கும் கொமதேக

நாமக்கல் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணி சார்பில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

திமுக கூட்டணியில் முதல் தொகுதி; ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் களமிறங்கும் ஐ.யூ.எம்.எல்

திமுக கூட்டணியில் முதல் தொகுதி யாருக்கு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடவுள்ளது. வேட்பாளராக நவாஸ் கனி களமிறங்கவுள்ளார். 

Breaking News LIVE: மூன்று முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி

காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை சட்டமன்ற் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதாரணி இன்று பா.ஜ.க வில் இணைந்தார். எல்.முருகன் முன்னிலையில் டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் பாஜகவில் இணைந்தார். 

Breaking News LIVE: காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய விஜயதாரணி எம்.எல்.ஏ; தலைவரான செல்வப்பெருந்தகைக்கு தலைவலி

காங்கிரஸ் கட்சியின் விளவங்காடு தொகுதியின் எம்.எல்.ஏவான விஜயதாரணி மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

புதுச்சேரியில் மாசிமக தீர்த்தவாரி - கடற்கரையில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

புதுச்சேரி கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடியுள்ளனர்.

சிங்கார சென்னையை உருவாக்கியதில் தி.மு.க.விற்கு பெரும் பங்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சிங்கார சென்னையை உருவாக்கியதில் பெரும் பங்கு உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் தலைவர்கள், தொண்டர்கள் மரியாதை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்துகின்றனர்.

போடிநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகல தொடக்கம்

நாமக்கல் அருகே போடிநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பரந்தூர் புதிய விமான நிலைய நில எடுப்புக்கு அறிவிப்பு வெளியீடு

பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கான நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Breaking News LIVE: தலைமை தேர்தல் ஆணையர் இன்றும் ஆலோசனை..!

தென் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ்குமார் இன்று ஆலோசனை. தேர்தல் நடைமுறை தொடர்பான துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார். 

Breaking News LIVE: பிரதமர் வருகை - பாதுகாப்பு குறித்து இன்று ஆலோசனை

பிரதமர் மோடி பிப்ரவரி 27ம் தேதி மதுரை வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பாதுகாப்பு மற்றும் பயண திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை பசுமலையில் உள்ள ஹோட்டலில் இன்று நடைபெறுகிறது. 

Breaking News LIVE: ராகுல் காந்தியின் யாத்திரையில் பிரியங்கா காந்தி..!

ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நீதி யாத்திரையில் பிரியங்கா காந்தி இன்று பங்கேற்கிறார்.

Breaking News LIVE: அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Background

கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 24ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 644வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.