Breaking News LIVE: மதுரையில் நடைபெற்ற மோதலில் வட மாநில தொழிலாளர் உயிரிழப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 11 Feb 2024 01:43 PM
மதுரையில் நடைபெற்ற மோதலில் வட மாநில தொழிலாளர் உயிரிழப்பு

மதுரையில் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயம்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை - எடப்பாடி பழனிசாமி

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

கிளாம்பாக்கத்தில் வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு அரசு

கிளாம்பாக்கத்தில் நேற்று வழக்கத்தை விட கூடுதலாகவே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு செய்துள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படுகிறது - அமைச்சர் சிவசங்கர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்படுகின்றது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE: மண்ணிவாக்கம் ஆம்னி பேருந்து நிலைய பணிகள் - அமைச்சர்கள் ஆய்வு

தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகளை அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், சேகர் பாபு  ஆய்வு செய்தனர். சேவை இல்லாத நேரத்தில் பேருந்துகளை நிறுத்தி வைக்க வசதியாக பணிமனை கட்டப்பட்டு வருகிறது. 

மக்களவைத் தேர்தலுக்காக வார் ரூம் அமைத்தது தி.மு.க.

மக்களவைத் தேர்தலுக்காக தி.மு.க. வார் ரூமை அமைத்துள்ளது.

Breaking News LIVE: சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்ப்பு - துரை முருகன் அறிவிப்பு

கடந்த ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் சேர்க்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் கிடைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் செல்ல பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் 2வது நாளாக போராட்டம் - அதேபோல் கிளாம்பாக்கம் செல்ல பேருந்துகள் கிடைக்காததால் போரூர் சுங்கச்சாவடியில் மக்கள் போராட்டம் நடத்தியதால் தாம்பரம் பைபாஸ் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

Background

கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 11ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 631வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.