Breaking News Live: அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 31 Jan 2023 01:44 PM
ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம்..!

ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினத்தினை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதன் மூலம் மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க கால அவகாசம்..!

பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில்11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜி20 மாநாடு...சென்னையில் 3 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை

ஜி20 கல்வி செயற்குழு மாநாட்டை முன்னிட்டு சென்னையில், நாளை முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை 3 ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் காற்றழுத்தம்: துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் காற்றழுத்தம் உருவாகி உள்ளதால் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர் மயக்கம்..!

சென்னை மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக உறுப்பினர் பானுமதி குறைந்த ரத்த அழுத்தத்தால் திடீரென மயக்கமுற்றார். இவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

தியாகிகள் தினத்தினையொட்டி உறுதிமொழி..!

தியாகிகள் தினத்தினையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். 

தியாகிகள் தினத்தினையொட்டி உறுதிமொழி..!

தியாகிகள் தினத்தினையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். 

அதிமுக வழக்கு - தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு..!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்னும் மூன்று நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருப்பரங்குன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம்

புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு பின் வைர தேரோட்டம் நடப்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். 

Background

தமிழ்நாட்டில் தொடர்ந்து 254வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.


இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. 


இன்றைய விலை









அதன்படி இன்று (ஜனவரி.30) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை கடந்துள்ளது.  


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.