கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் பெங்களூர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பெங்களூர், நாட்டிலே அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றாகும். இதனால், அங்கு போக்குவரத்தை சீர்செய்வதற்காக 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


பைக் டேங்க்கில் உட்கார்ந்து சென்ற காதலி:


சில சமயங்களில் போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பையும் மீறி சிலர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதுபோன்று ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில், பெங்களூர் விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலம் ஒன்றில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது காதலியை ஏற்றிக் கொண்டு சென்றார். அதாவது, அவருடைய காதலியை பின்புறம் அமரவைத்து பயணிக்காமல் காதலியை அவர் ஓட்டிச் சென்ற பல்சர் பைக்கின் முன்புறம் உள்ள டேங்க் மீது உட்கார வைத்து சினிமா பாணியில் ஓட்டிச் சென்றார்.






காதலனை தூக்கிய போலீஸ்:


இதை பின்னால் வந்த வாகனத்தினர் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அந்த வாலிபரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர். அவர் தனது பைக்கில் தனது காதலியை டேங்க்கில் உட்கார வைத்து ஓட்டிச் சென்ற வீடியோவையும், பின்னர் அவரை போலீசார் கைது செய்த வீடியோவையும் பெங்களூர் மாநகர போக்குவரத்து காவல்துறையினரே பகிர்ந்துள்ளனர்.


மேலும், சாலையில் இதுபோன்று ஸ்ட்ண்ட் செய்ய வேண்டாம் என்றும், சாலையில் செல்லும் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக செல்லுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். பெங்களூர் போக்குவரத்து காவல்துறை பகிர்ந்துள்ள இந்த வீடியோவிற்கு கீழே பலரும் அந்த பெண்ணை மட்டும் ஏன் கைது செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு பயனாளர் கமல்ஹாசன் உத்தமபுத்திரன் படத்தில் நடிகை பூஜாகுமாரை அமரவைத்து பைக் ஓட்டும் படத்தை பகிர்ந்து இதுபோன்ற சினிமா நடிகர்களால்தான் இளைஞர்கள் இவ்வாறு செய்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.


இன்றைய தலைமுறையினர் பலரும் இதுபோன்று தனது காதலியை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று ஏதாவது ஆபத்தான சாகசத்தில் ஈடுபடுவது ஆபத்தானது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு


மேலும் படிக்க: சென்னை அருகே ஒரே தண்டவாளத்தில் வந்த 2 ரயில்கள்..! அதிர்ச்சியில் அலறிய பயணிகள்..!