Chennai Metro : நடப்பாண்டில் கடந்த 5 மாதங்களை விட ஜூன் மாதத்தில் மட்டும் 1.38 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.


சென்னை மெட்ரோ ரயில் சேவை 


சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் சாலை வழியான பயணத்திற்கு மாற்றாக மெட்டோ ரயிலில் பயணிப்பதை தேர்வு செய்கின்றனர்.  தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இயக்கப்படுகிறது.


மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வரும் நிலையில், மாதவரம்-சிறுசேரி, பூந்தமல்லி-கலங்கரை விளக்கம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் மெட்ரோ பயணிகள் நடந்து வருகிறது.


ஜூன் மாதம்


இந்நிலையில், நடப்பாண்டில் கடந்த 5 மாதங்களை விட ஜூன் மாதத்தில் மட்டும் 1.38 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,


”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 869 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிலும் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69.99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66.85,432 பயணிகளும், மே மாதத்தில் 72.68,007 பயணிகளும் மற்றும் ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 28:06:20023 அன்று 2,95,509 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


2023, மே மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 25,15,727 பயணிகள் பயண அட்டைகளை (Travel Card Tacketing System) பயன்படுத்தி 44.81995 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி #98,131 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group T151-1) முறையை பயன்படுத்தி 5,085 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 5.938 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண டைகளை (Trasel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 204 கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (-4) 2008) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.