சென்னை திருவான்மியூரில் தனியார் ஹோட்டலில் HLR -எனும் தனியார் நிறுவனம் மூலம் கடற்கரைகள், சாலைகள், பூங்காக்கள் மற்றும் சென்னையின் பல பகுதிகளிலிருந்து இருந்து 1 கோடி PET பாட்டில்களை சேகரித்து அதை  மறுசுழற்சி செய்து ஆடை நெய்வதற்கும் நூல்கள் தயாரிப்பதற்கும் கொடுத்து வருவதற்கான  பாராட்டு விழா நடைபெற்றது,  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகர மேயர் பிரியா, கனரா வங்கி இயக்குனர் நளினி பத்மநாபன், திரை பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 


பிளாஸ்டிக் பயன்பாடு:


இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேசியதாவது, "பிளாஸ்டிக் மறுசுழற்சி என்பது சென்னை மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது, தமிழ்நாட்டில் இதன் முக்கியத்துவத்தை கருதி தமிழ்நாடு முதலமைச்சர் மஞ்சப்பைத் திட்டத்தை கொண்டு வந்தார். கடைகளில் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி சார்பாக  நாம் அறிவித்துள்ளோம், இருப்பினும் பிளாஸ்டிக் பாட்டில்களின் உபயோகம் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாய் பகுதிகளில் கொட்டப்படுகின்றன இதுகுறித்தான விழிப்புணர்வை மக்களிடையே பெரும் அளவு ஏற்படுத்த வேண்டும்.


மக்கள் ஒத்துழைப்பு தேவை:


பிளாஸ்டிக் பயன்பாடு ரொம்ப வசதியாக இருப்பதால் பலரும் இன்னும் பயன்படுத்துகின்றனர். மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கால்வாயில் போடுகிறோம். கடலில் போடுகிறோம். வகை,வகையான மீன்கள் அழிந்து வருகிறது. முடிந்த வரை பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே நல்ல முடிவு கொண்டு வரமுடியும்." என மேயர் பிரியா கூறினார். மேலும் HLR நிறுவனம் மூலம் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கள் மருத்துவ வளர்ச்சி செய்ய உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.


தமிழ்நாடு அரசால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: TN Rains: 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை! உங்க மாவட்டத்துல வானிலை எப்படி? முழு விவரம்


மேலும் படிக்க:பனங்கருப்பட்டி தூள் தெரியுமா? ஐ.டி வேலையை விட்டுட்டு கருப்பட்டி காய்ச்சும் பட்டதாரி இளைஞர்