திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 


அத்திப்பட்டு அருகே அமைந்துள்ள தனியார் பள்ளியில் கோடை விடுமுறை காலத்தில், கழிவுநீர் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
கழிவுநீர் தொட்டியை சுத்தம், செய்த துப்புரவு பணியாளார்கள் கோவிந்தன், சுப்பராயலு ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்திப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மயங்கிய நிலையில் கிடந்த தொழிலாளர்களின் சடலங்களை மீட்டனர். இது தொடர்பாக பள்ளி தாளாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மீஞ்சூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் வாசிக்க..


BJP Manifesto Karnataka: ’என்.ஆர்.சி, பொது சிவில் சட்டம் அமலாகும்..’ கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையால் பரபரப்பு.. முழு விவரம்


Producers Council Election: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி.. 2வது முறையாக தலைவரானார் ‘தேனாண்டாள்’ முரளி