Breaking News LIVE : கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா - அழைப்பை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

உமா பார்கவி Last Updated: 18 May 2023 05:09 PM
ஊராம்பட்டி பட்டாசு ஆலை விபத்து நிவாரணம்..!

ஊராம்பட்டி பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கும் தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

Breaking News LIVE : திருமணத்திற்கு பிறகு தனது குடும்பத்தினருடன் ஆளுநர் RN ரவியை சந்தித்த யூடியூபர் இர்ஃபான்



Breaking News LIVE : கர்நாடக பதவியேற்பு விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளனர்.


 

Breaking News LIVE : மீன்பிடிப் படகுகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம்

கடல் வழியே மதுபானம் கடந்த்துவதை தடுக்க மீன்பிடிப் படகுகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் கண்காணிப்பு. படகுகளை பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் கண்காணிகக் நடவடிக்கை என காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் அறிவித்துள்ளார். 

Breaking News LIVE : கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு;வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!



Breaking News LIVE : ”தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது.” - ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரியாக்‌ஷன்!

தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE :தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. !

வானிலை நிலவரம்: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், ஈரோடு மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE : பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



Breaking News LIVE : புரி - ஹவுரா இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்!

புரி - ஹவுரா வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி 

Breaking News LIVE : ஜல்லிக்கட்டு தீர்ப்பு - பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி

ஜல்லிக்கட்டு தீர்ப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE : சென்னையில் வெப்பம் குறைய வாய்ப்பு

சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Breaking News LIVE : கர்நாடகாவின் எதிர்காலம் மட்டுமே முக்கியம் - சிவக்குமார்

கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம், மக்களின் நலன் மட்டுமே எங்களின் முக்கிய நோக்கம் என்று சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE : பிளே ஆஃப் - டிக்கெட் 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன

சென்னையில் நடக்கும் பிளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

Breaking News LIVE : ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Breaking News LIVE : புவி அறிவியல் துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு நியமனம்

மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

Breaking News LIVE : மத்திய அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்

மத்திய அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Breaking News LIVE : தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,200க்கு விற்பனையாகிறது.

Breaking News LIVE : கருணாநிதி நூற்றாண்டு விழா - முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

Breaking News LIVE : கள்ளச்சாராய வழக்கு - விசாரணை அதிகாரிகள் நியமனம்

விழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய  வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Breaking News LIVE : கள்ளச்சாராய வேட்டை - டெல்டாவில் மட்டும் 535 பேர் கைது

காவல்துறை நடத்திய கள்ளச்சாராய வேட்டையில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் இதுவரை 535 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Breaking News LIVE : பட்டாசு கடை விபத்து - உரிமையாளர் கைது

விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக உரிமையாளர் கைதாகி உள்ளார்.

Breaking News LIVE : ஹரியானா பாஜக எம்.பி. ரத்தன் லால் காலமானார்

ஹரியானா மாநில அம்பாலா தொகுதி பாஜக எம்.பி.ரத்தன் லால் உடல்நலக்குறைவால் காலமானார்.

Breaking News LIVE : 12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் இன்று முதல் மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE : அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - நாளை கடைசி தேதி

தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.

Breaking News LIVE : மாநில தேர்தல் ஆணையராக பழனிக்குமார் மறு நியமனம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக பழனிக்குமாரை மறு நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

Breaking News LIVE : ஊராட்சி செயலாளர்கள் 4வது நாளாக போராட்டம்

சென்னை சைதாப்பேட்டையில் ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் 4வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Breaking News LIVE : ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்குகள் நல அமைப்புகளின் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.

Breaking News LIVE : 10,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு

தமிழகத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.

Background


சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி  ஓராண்டை நெருங்கி கொண்டிருக்கும்  பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம். 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.18) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 362வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









 


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.