Breaking News LIVE: தயிர் பாக்கெட்டில் தஹி என இந்தியில் அச்சிட தமிழ்நாடு அரசு மறுப்பு
BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
பேருந்து பணிமனைகளில் உணவகங்கள் நடத்த மகளிர் சுய உதவி குழுக்கள் முன் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கென நான்கு இருக்கைகள் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்
தயிர் பாக்கெட்டில் தஹி என இந்தியில் அச்சிட மத்திய அரசின் வலியுறுத்தலுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வரியிடம் இருந்து மேலும் 43 சரவன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
நெல்லையில் பல் பிடுங்கப்பட்ட விசாரணை கைதி சூர்யாவை பரிசோதித்து பல் மருத்துவர் அறிக்கை தர சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ராகுல் விவகாரத்தினால் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் இன்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாததால் நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
லட்சத்தீவு எம்பி முகமது ஃபைசலை தகுதி நீக்கம் செய்ததை ரத்து செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. கேரள உயர்நீதிமன்றம் ஜனவரி 25ல் அளித்த உத்தரவை தொடர்ந்து எம்பி தகுதி நீக்கம் ரத்து செய்யப்பபட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயிலில் செல்ல ஒரே இ-டிக்கெட் முறை 2024ஆம் ஆண்டு நடைமுறைக்கு வருவதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகைக்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.1,000 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், மேலும் ரூ.1,000 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ 44,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,545 ஆக விற்பனையாகிறது.
தமிழ்நாட்டில் சிங்கப்பெருமாள் கோயில், திருமுடிவாக்கம், மௌலிவாக்கம், அயப்பாக்கம் , இருகூர், காலப்பட்டு, கானக்கிளியநல்லூர், நல்லூர், திருவண்ணாமலை மேற்கு, நீலாம்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் ரூ.59.19 கோடி செலவில் காவல் நிலையங்களை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர் அருகே தா.பழூரில் பத்திரப்பதிவுக்கு போலியாக ஆதார் கார்டு தயாரித்த புகாரில் இருவர் கைது - போலி ஆதார் அட்டை மூலம் பத்திரப்பதிவு செய்த மார்ட்டின், தயாரித்து கொடுத்த சத்திய சீலனை போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்ற 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று காலை 11.30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
தேனியில் தற்காலிக தடை நீக்கப்பட்டதை அடுத்து கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் அசோக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Background
சென்னையில் தொடர்ந்து 10 மாதங்களை கடந்தும் மாறாமல் இருந்த பெட்ரோல், டீசல் எரிபொருளின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில், முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும் முழு முயற்சியில் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்று (மார்ச் 29) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 312வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -