Breaking News LIVE : பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. 2023-2024 ஆம் ஆண்டிற்காக பட்ஜெட் தாக்கல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதகாவும்,ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை எனத் தகவல்.
நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் உறுதி அளித்துள்ளதையெடுத்து,திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோனில் மதுபானங்களை ஏற்றிச்செல்லும் 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து வாகன உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்துவதற்கு தகுந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை பிறப்பிக்க வேண்டும்.
தெய்வீக பேரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பா.ஜ.க. மாநிலத்தலைவர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார்.
என்.எல்.சி மற்றும் தமிழக அரசைக் கண்டித்து வரும் 11ஆம் தேதி கடலூரில் பாமக முழு அடைப்பு போராட்டம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 31ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார். மார்ச் 13ஆம் தேதி பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்ய உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் பற்றி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கவில்லை. அதிமுகவின் வளர்ச்சி குறித்து மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் எந்த மோதலும் இல்லை. அதிமுக தலைமையிலான கூட்டணி தொடரும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவையில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தொழில்துறையுடன் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை காலை 9 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி திகார் சிறையில் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.55 கோடி மதிப்புள்ள போதைப்பெருள் பறிமுதல் செய்யப்பட்டது. மும்பையிலிருந்து சென்னை வந்த பயணி கடத்தி வந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
H3N2 காய்ச்சல் வந்தவர்கள் 3 நாட்கள் வீட்டிலேயே இருந்தால் போதும். காய்ச்சல் பாதித்தவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் உள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்பு திட்டமான புன்னகை திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6,7,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய பாஜக அரசின் ஆளுநர்களுக்கு வாய்மட்டும்தான் உண்டு, காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது. ஆளுநர்கள் அரசியலில் தலையிடக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறியது பற்றிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தாம்பரம் முதல் நெல்லை வரையிலான கோடைகால சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது - ஏப்ரல் முதல் ஜூன் வரை ஞாயிறுதோறும் நெல்லையில் இருந்தும், திங்கட்கிழமை தோறும் தாம்பரத்தில் இருந்தும் இந்த ரயில் இயக்கப்படுகிறது
திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் பேரவையில் நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது பற்றி அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.
புதுச்சேரி மாநில சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.45 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை 3வது முறையாக தமிழில் உரையாற்ற உள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நாட்டு துப்பாக்கியால் சுட்டு விவசாயி கண்ணதாசன் தற்கொலை செய்து கொண்டார்.
Background
சென்னையில் தொடர்ந்து 292வது நாள்களாக மாற்றமில்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் ஆசுவாசமடைந்துள்ளனர்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.
தொடர்ந்து மாறாத எரிபொருள் விலை
சென்னையில் இன்று (மார்ச்.09) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 292வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.
இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -