Breaking News LIVE : ஈரோட்டில் இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு

Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.

உமா பார்கவி Last Updated: 11 Mar 2023 06:43 PM
ஈரோட்டில் இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு

ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் பகுதியில் 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீசியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Breaking News LIVE : விரைவில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் - அமைச்சர் பொன்முடி நம்பிக்கை

மேலும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுப்போம் கூறியிருக்கிறார். 

Breaking News LIVE : வைகோவுடன் திருமாவளவன் சந்திப்பு

சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

Breaking News LIVE : ஈபிஎஸ்-க்கு எதிராக முழக்கம் - மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு

மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கும் இடத்தில் இருந்து வெளியே வரும் பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் ஈபிஎஸ்க்கு எதிராக முழக்கமிட்டுள்ளார். ஈபிஎஸ்க்கு எதிராக முழக்கமிட்ட நபர் சிங்கப்பூரில் இருந்து சென்னை வழியாக மதுரைக்கு பயணித்தவர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Breaking News LIVE : மாணவர் கொலை - ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

திருச்சி தொட்டியம் அருகே சக மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை, 2 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Breaking News LIVE : காய்ச்சல் பாதித்த 8 மாத குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் பழவேற்காடு அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 8 மாத குழந்தை லிக்கித் சாய் 3 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழப்பு

Breaking News LIVE : மாணவர் உயிரிழப்பு - 6 பேர் மீது வழக்கு

திருச்சி அரசு பள்ளியில் சக மாணவர்கள் தாக்கி 10ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியை, 2 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் என 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Breaking News LIVE : பிரேத பரிசோதனைகளை வீடியோ பதிவு செய்ய மதுரை கிளை உத்தரவு

சந்தேக மரணங்களில்  பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

Breaking News LIVE : திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி சுப்பிரமணியன் (75) நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார்.

Breaking News LIVE : ”அமைச்சர் சேகர்பாபுவுக்கு இன்னொரு முகம் இருக்கு" - நடிகர் ரஜினிகாந்த்

அமைச்சர் சேகர்பாபு ரொம்ப விசுவாசம் ஆனவர், அன்பானவர். அவருக்கு இன்னொரு முகம் இருக்கு பாட்ஷா மாதிரி  என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.

Breaking News LIVE : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்

”இந்த கண்காட்சியை பார்க்கும் போது என்னுடைய இனிய நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், 54 ஆண்டுகள் அரசியல் பயணம், கட்சியில் உழைத்து படிப்படியாக பல பதவிகளை வகித்து இன்றைக்கு முதலமைச்சரா இருக்கிறார் என்றால் அது மக்கள் உழைப்புக்கு கொடுத்த அங்கீகாரம்" என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE : பீகார் துணை முதல்வருக்கு சிபிஐ சம்மன்

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிற்கு 2வது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ரயில்வே திட்டத்தில் முறைகேடு செய்த வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

Breaking News LIVE : முதல்வர் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட ரஜினி

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி அவர் கடந்த வந்த பாதைகள் குறித்து புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ 42,160 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.5,270 ஆக விற்பனையாகிறது.

Breaking News LIVE : தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் - மின்வாரியம் ஆணை

பொதுத்தேர்வுகளுக்கான மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதும்போது மின்தடை ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடுகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Breaking News LIVE : புதுச்சேரியில் அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல்

புதுச்சேரியில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Breaking News LIVE : திருச்சியில் ரூ.97.17 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில்  ரூ.97.17 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking News LIVE : சிதம்பரத்தில் வழக்கம்போல் கடைகள் திறப்பு

கடலூர் சிதம்பரத்தில் வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டு பேருந்துகள் இயங்கி வருகின்றன. காய்கறி சந்தை, பல்வேறு கடைகள் திறக்கப்பட்ட நிலையில், அரசு, தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

Breaking News LIVE : கடலூர் மாவட்டத்தில் 7 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

முழு அடைப்பு அழைப்பையொட்டி கடலூரில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Breaking News LIVE : சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இரு கால்வாய்கள் வழியாக 570 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 90 நாட்களுக்கு தென்பெண்ணை ஆற்றில் நீரை திறந்துவைத்தார் அமைச்சர் எ.வ.வேலு .

Breaking News LIVE : காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பள்ளிகள் செயல்படும் என அனுப்பிய  சுற்றறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் வாபஸ் பெற்றார்.

Breaking News Live : ஒரு மாதத்திற்கு பிறகு முட்டை விலை உயர்வு

ஒரு மாதத்திற்கு பிறகு 5 காசுகள் உயர்ந்து நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.45ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை ரூ.4.45, சென்னையில் ஒரு முட்டையின் விற்பனை விலை ரூ.4.65 ஆக உள்ளது.

Breaking News LIVE : மதுரையில் வியாபாரிகள் பால் நிறுத்த போராட்டம்

மதுரையில் ஆவினுக்கு பால் கொடுக்காமல் வியாபாரிகள் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கக் கோரி போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

Background

சென்னையில் தொடர்ந்து 294வது நாள்களாக மாற்றமில்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் ஆசுவாசமடைந்துள்ளனர்.


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம். 


இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால்  பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.


தொடர்ந்து மாறாத எரிபொருள் விலை 









 


சென்னையில் இன்று (மார்ச்.11) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 294வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். 


இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  


இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.