Breaking News LIVE : வேங்கைவயல் விவகாரம் - கைது நடவடிக்கையில் தாமதம் குறித்து சட்டத்துறை அமைச்சர் பதில்!
BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
krishnagiri caste killing Case: வேங்கைவயல் விவகாரத்தில் கைது நடவடிக்கையில் தாமதம் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். வேங்கைவயல் ஒரு குக்கிராமம், சம்பவம் குறித்து சிசிடிவி ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எழுப்பிய கேள்விக்கு ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
காரைக்காலில் 14 பேர் உள்பட புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெயில் அதிகரிப்பதால் தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றி அமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அஹுஜா மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பணி மூப்பு வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 22ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் சில்லறை விற்பனையகம் மும்பையில் திறக்கப்பட்டது
பெரியவர் எல்.இளையபெருமாளுக்கு கடலூர் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
சிவகங்கை: கீழடி 9ஆம் கட்ட அகழாய்வில் வட்டச்சில் மற்றும் கண்ணாடி மணிகள் கண்டறியப்பட்டுள்ளன
சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் பதுக்கப்படவில்லை என சி.எஸ்.கே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். .
சென்னைக்கு தேவையான குடிநீர் ஏரிகளில் கழிவுநீர், குப்பைகள் கொட்டாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்
சமயபுரம், ஸ்ரீரங்கம் தேரோட்டத்தையொட்டி இன்றும் நாளையும் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 11ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை தவறாமல் அனுப்ப தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூடானில் உள்நாட்டு மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க வெளியுறவுத்துறை செயலளார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் கல்லூரி மாணவர் கார்த்திக் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இன்று இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தையொட்டி குஜராத் மாநிலம் துவாரகா-மதுரை இடையே நாளை முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Background
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில், முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும் முழு களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்று (ஏப்ரல்.18) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 332வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -