மக்காசோளம் என்றும் அழைக்கப்படும் ஜோவர், ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட ஒரு  தானியமாகும். இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல பகுதிகளில் பரவலாக பயிரிடப்படும், இது பல நாடுகளில் பிரதான உணவாக உள்ளது. இது மாவு, கால்நடைத் தீவனம் மற்றும் மதுபானங்கள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஜோவர் உலகின் முதல் ஐந்து ஆரோக்கியமான தானியங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவது வரை பல ஆரோக்கிய நன்மைகளுடன் நிரம்பியுள்ளது. ஜோவர் ஒரு சூப்பர்ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது, இது எடை குறைக்க உதவுகிறது. 



சோள உப்புமா


ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவோடு தொடங்க வேண்டும் என்றால், இதை விட சரியான உணவு இருக்க முடியாது. இந்த மக்காச்சோள (ஜோவர்) உப்மா செய்முறை உங்களுக்கு நிறைய ஆரோக்கியத்தை வழங்கும் காலை உணவாக இருக்கும். உப்புமா என்றதுமே பலரும் சோர்வடைவது சகஜம்தான், ஆனால் அதனை செய்யும் முறையில் செய்தால் சாப்பிடமாட்டேன் என்பவர்கள் கூட சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த சோளத்தில் செய்வதால் இயற்கையாகவே அதன் சுவை அதிகமாக இருக்கிறது. மேலும் பின் வரும் செயல்முறையில் செய்தல் யாராக இருந்தாலும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.  


தொடர்புடைய செய்திகள்: The Kerala Story issue:வலுக்கும் கேரளா ஸ்டோரி சர்ச்சை.. 32,000 எப்படி 3-ஆக மாறியது? பல்டி அடித்த படக்குழு


சோள உப்மா செய்ய தேவையான பொருட்கள்:


மக்காச்சோள மாவு - 1 கப்


பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்


ரவை - 1/2 கப்


வேகவைத்த பச்சை பட்டாணி - 1/2 கப் (விரும்பினால் மட்டும்)


நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்


நறுக்கிய பச்சை கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்


பெருங்காயம் - 1-2 சிட்டிகை


கடுகு - 1 தேக்கரண்டி


உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்


நறுக்கிய கறிவேப்பிலை - 8-10


எலுமிச்சை - 1


எண்ணெய் - 1-2 டீஸ்பூன்


உப்பு - தேவையான அளவு



செய்முறை



  • சோள உப்மா செய்ய, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.

  • அதன் பிறகு, கொதிக்கும் நீரில் சிறிது பட்டாணியை ஊறவைத்து, பின்னர் ஒரு கடாயை எடுத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.

  • எண்ணெய் சூடானதும், கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

  • கடுகு வெடிக்கத் தொடங்கும் போது, ​​கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து மேலும் சில நொடிகள் வாசனையை வெளிவரும் வரை நன்கு வதக்கவும்.

  • அதன் பிறகு, கடாயில் வெங்காயம் சேர்த்து சிறிது மென்மையாக மாறும் வரை 1 நிமிடம் வதக்கவும்.

  • வெங்காயம் வதங்கியதும் அதில் ரவை சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் வதக்கவும்.

  • இதற்குப் பிறகு, சோள மாவு சேர்த்து, அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.

  • இப்போது பச்சை மிளகாய் விழுது, பட்டாணி, கொத்தமல்லி தழை மற்றும் உப்பு சுவைக்கு தகுந்தவாறு சேர்த்து மூடி வைத்து சிம்மில் வைத்து வேக வைக்கவும்.

  • இதன் பிறகு, வாணலியில் 3 கப் (தேவைக்கேற்ப) தண்ணீரைச் சேர்த்து, பெரிய கட்டிகளை கரண்டியால் உடைத்துவிட்டு நன்கு கலக்கவும்.

  • இப்போது சிம்மில் 2-3 நிமிடங்கள் வைத்து, கடைசியாக, சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து, அடுப்பை அணைத்து இறக்கினால் சூடான சோள உப்புமா ரெடி!