கொழுப்பை குறைக்கனுமா… இதையெல்லாம் உணவில் சேர்த்துக்கோங்க… நிபுணர்கள் பரிந்துரைக்கும் 10 மூலிகைகள்!

டாக்டர். டிக்ஸா பவ்சர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும் மூலிகைகளை எடுத்துரைத்தார்.

Continues below advertisement

சமீப காலங்களில், இளைஞர்களிடையே இதய நோய் அபாயம் கணிசமாக அதிகரித்துள்ளது, பலர் அதிக கொலஸ்ட்ரால் அளவை கொண்டிருக்கின்றனர். கொலஸ்ட்ராலை நல்லது, கெட்டது என வகைப்படுத்தலாம். கெட்ட கொலஸ்ட்ரால் தான் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம், ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்கலாம். உங்கள் வழக்கமான உணவில் சில விஷயங்களை சேர்த்துக்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. ஆயுர்வேத நிபுணர் டாக்டர். டிக்ஸா பவ்சர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும் மூலிகைகளை எடுத்துரைத்தார்.

Continues below advertisement

அவர் பரிந்துரைக்கும் சில மூலிகைகள் இங்கே:

நெல்லி

நெல்லிக்காயை சாறு, பொடி, மாத்திரை அல்லது பழமாக உட்கொள்ளலாம்.

சீந்தில் (Guduchi)

சீந்தில் என்பது மரங்களில் தொற்றிப் படரும் ஒரு மூலிகைத் தாவரமாகும். மூலிகை தேநீர் அல்லது சப்ளிமெண்ட்ஸ் போன்ற பல்வேறு வடிவங்களில் இந்த மூலிகையை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சோம்பு, சீரகம், திப்பிலி

இந்த மூலிகைகளை வைத்து தேநீர் செய்து ஒன்றாக உட்கொள்ளலாம். உணவுக்குப் பிறகு வாய் புத்துணர்ச்சியாகவும் அவற்றைப் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை அல்லது வினிகரை வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட 1 மணி நேரத்திற்குப் பிறகு உட்கொள்வது கொலஸ்ட்ராலை குறைக்கும் ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்: Oommen Chandy Passes Away: அதிகாலையில் சோகம்.. முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்.. கேரளா காங்கிரஸ் அறிவிப்பு

இஞ்சி

இஞ்சியை மூலிகை டீயில் சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உட்கொள்ளலாம். உலர் இஞ்சி பொடியை காலையில் தேனுடன் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து நாள் முழுவதும் உட்கொள்ளலாம்.

அர்ஜுனா

அர்ஜுனா எனப்படும் இந்த மூலிகை இதயத்தை பாதுகாக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. அர்ஜுனா பட்டையை (அர்ஜுன் சால்) படுக்கைக்கு முன் அல்லது காலையில் டீயாக உட்கொள்ளலாம். அர்ஜுனா மாத்திரைகளாகவும் கிடைக்கின்றன.

குகுள்

Guggul என்பது Commiphora wightii இன் பட்டையிலிருந்து பெறப்படும் ஒரு ஓலியோ-கம் பிசின் ஆகும். இது கொழுப்பை எரிக்கவும், ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும் உதவுகிறது. இதை தனி மருந்தாகவோ அல்லது மற்ற மூலிகைகளுடன் சேர்த்தோ எடுத்துக் கொள்ளலாம்.

திரிகடுகம்

திரிகடுகம் என்பது இஞ்சி, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மூலிகைகளைக் கொண்ட ஒரு ஆயுர்வேத மூலிகை முறை ஆகும். இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

திரிபலா

திரிபலா என்பது நெல்லி, கடுக்காய் மற்றும் விபிதாகி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட நன்கு அறியப்பட்ட ஆயுர்வேத சூத்திரமாகும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது.

டாக்டர் டிக்சா பவ்சர், அரவிந்த் ஹிருதயம் என்ற மூலிகை கலவையை உருவாக்கியுள்ளார். இது ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க இந்த அனைத்து மூலிகைகளையும் இணைக்கிறது. இந்த மூலிகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் இதய ஆரோக்கியம் மற்றும் கொலஸ்ட்ரால் மேலாண்மைக்கு பல நன்மைகள் கிடைக்கும். இருப்பினும், உங்கள் உணவு அல்லது வாழ்க்கைமுறையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன், ஒரு சுகாதார நிபுணர் அல்லது ஆயுர்வேத பயிற்சியாளரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

Continues below advertisement