நீரின்றி அமையாது உடல்… உடலில் நீரேற்றம் குறையாமல் வைத்திருப்பது உடல் ஆரோக்யங்களில் மிகவும் அவசியமானது ஆகும். அதற்கு கண்டிப்பாக தண்ணீர் குடிக்கவேண்டியது அவசியம்தான்.  தண்ணீர் வாழ்க்கையின் அமுதம், ஆனால் அனைவருமே பொதுவாக போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. நீரேற்றம் இல்லாததால் தலைவலி, சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், கவலைகள் மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.


நிறைய தண்ணீர் குடித்தால், உடல் அனைத்து உறுப்புகளையும் சரியாக செயல்பட உதவுகிறது. மேலும் உடலில் இருந்து நச்சுகளை வெளியிட உதவுகிறது. எனவே, தண்ணீரை நிறைய உட்கொள்வது மிகவும் முக்கியமானது. இது ஆரோக்கியத்திற்கு பெரிய நன்மைகளை தரும். ஆனால் பலருக்கு தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கம் இருப்பது இல்லை. அவர்களுக்கு வேறு வழிகள் உள்ளன. பழங்கள் மூலமாகவும் உங்கள் உடலுக்குத் தேவையான நீரேற்றத்தைக் கொடுக்கலாம். பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்திருப்பது மட்டுமல்லாமல், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும் அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பழங்கள் உள்ளன.


நீரேற்றத்துடன் இருக்க உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய 5 பழங்கள்:



  1. ஆப்பிள்கள்


ஆப்பிளில் ஏறக்குறைய 86% நீர் உள்ளது, எனவே இது உங்கள் உடலுக்குத்தேவையான நீரேற்றத்தை சேர்க்க சிறந்த பழமாகும். ஆப்பிள்கள் சுவையானது மட்டுமல்ல, அவற்றை தொடர்ந்து உட்கொள்வது இதய ஆரோக்கியம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் பலவற்றிற்கு உதவும். உங்கள் காலை உணவின் ஒரு பகுதியாக ஆப்பிளைச் சேர்த்துக் கொள்ளலாம், அல்லது சிற்றுண்டியாக சாப்பிடலாம். அது உங்கள் நீரின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.




  1. தர்பூசணி


தர்பூசணி மிகவும் பிரபலமான நீர்ச்சத்து கொண்ட பழங்களில் ஒன்றாகும். இதில் 96% நீர் உள்ளது, எனவே தர்பூசணி கோடையில் தாகத்தைத் தணிக்க அனைவரும் விரும்பும் பழமாகும். தர்பூசணிகளில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான வைட்டமின்களான வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளன. மேலும், தர்பூசணிகளில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்கும் விரும்புபவர்களுக்கு இது சரியான சிற்றுண்டியாக அமைகிறது. தர்பூசணி பழச்சாறு ஒரு சிறந்த காலை உணவு விருப்பமாக இருக்கும். இது உங்களை நாள் முழுவது தேவையான நீரேற்றத்துடன் வைத்திருக்கும். தண்ணீருக்கு சரியான மாற்றாகவும் செயல்படும்.


தொடர்புடைய செய்திகள்: ஆர்டர் செய்தது கைக்கடிகாரம்; வந்ததோ மாட்டு சாணம் - ஃபிலிப்கார்ட் சேவையால் கொந்தளித்த பெண்மணி



  1. பப்பாளி


88% தண்ணீரைக் கொண்ட பப்பாளி, உடலுக்குத் தேவையான மற்றொரு சிறந்த நீர் ஆதாரமாகும். இது வைட்டமின்கள் சி, ஏ, ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் நன்மைகளுடன் உள்ளது. பப்பாளி உண்பது இதய ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்துகிறது, வீக்கத்திற்கு எதிராக போராடுகிறது மற்றும் செரிமானத்திற்கும் உதவுகிறது. 




  1. ஆரஞ்சு


ஆரஞ்சுப்பழம் ஆரோக்கிய நன்மைகளால் நிரம்பியுள்ளது. அதிக நீர் உள்ளடக்கம் காரணமாக உடலுக்கு நீரேற்றத்தை வழங்கும் தன்மை கொண்டுள்ளது. வைட்டமின் சி மற்றும் பொட்டாசியத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆதாரமான ஆரஞ்சு, வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க சிறந்ததாக கருதப்படுகிறது. ஆரஞ்சுகள் தெளிவான மற்றும் பிரகாசமான சருமத்தைப் பெறவும் உதவுகிறது. ஆரஞ்சுப்பழத்தின் அதிகபட்ச பலன்களைப் பெற, மதியம் சிற்றுண்டியாக சாப்பிடலாம் அல்லது, பழச்சாறாக சாப்பிடலாம்.



  1. ஸ்ட்ராபெர்ரிகள்


ஸ்ட்ராபெர்ரியில் 91% தண்ணீர் உள்ளது. இந்த சுவையான பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஸ்ட்ராபெர்ரியில் நார்ச்சத்து, மாங்கனீஸ், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் கொண்டுள்ளன. ஸ்ட்ராபெர்ரியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அவை செரிமானத்திற்கு உதவுகின்றன. இது இதய அபாயங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். ஒரு சுவையான ஸ்ட்ராபெரி ஸ்மூத்தியை செய்து சாப்பிடலாம். அல்லது அவற்றை உங்கள் சாலட்டில் சேர்த்து, ஸ்ட்ராபெர்ரியின் ஆரோக்கிய நன்மைகளை எடுத்துக்கொள்ளலாம்.


உங்கள் உடலை ஒருபோதும் தண்ணீர் இல்லாமல் வைத்திருக்காதீர்கள். இந்த நீரேற்றும் பழங்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்து, எப்போதும் நீரேற்றத்துடன் இருங்கள்.