ஈரோடு அருகே உள்ள அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க இந்த வாரத்துடன் கால அவகாசம் முடிவடைகிறது.


பணி விவரம்:



  • அர்ச்சகர்

  • சீட்டு விற்பனையாளார்

  • இரவுக்காவலர்

  • திருவலகு


கல்வி மற்றும் பிற தகுதிகள்:


அர்ச்சர் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


சமய நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்துகின்ற ஏதேனும் ஆகமப்பயிற்சி மையத்தில் தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


சீட்டு விற்பனையாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.


இரவுக்காலவர், திருவலகு பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


அர்ச்சகர் - ரூ.3000


சீட்டு விற்பனையாளார் - ரூ.3,100 -9,300


இரவுக்காவலர் - ரூ.2300 - 7400


திருவலகு -ரூ.2300 -7400


வயது வரம்பு:


விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்குப்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 


இந்தப் பணி தொகுப்பூதியம் அடிப்படையிலானது என்றும், இதர விபவரங்களை கோயில் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் அலுவலக நேரங்களில் நேரடியாக கேட்டுத் தெரிந்துக்கொள்ளாலம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி 


செயல் அலுவலர்,
அருள்மிகு கொங்கலம்மன் திருக்கோயில்.
ஈரோடு - 638 001
தொடர்புக்கு - 0424 - 2214421
 
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.06.2023


இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1rAEdjoxl0l1sqDTiFo9hYUp-7NYixGph/view- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.




மேலும் வாசிக்க..


Udhayanidhi Stalin: 'நமக்கு நடிக்கவே வராது. அதுக்கே பெரிய பாடா இருக்கும்; இதுல இது வேறயா?’ - உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு!


Vetrimaaran on Vaadivaasal: சூர்யா வளர்க்கும் காளைக்கு டூப்! லேட்டஸ் டெக்னாலஜியை பயன்படுத்தும் வாடிவாசல் குழு! தாமதத்திற்கு காரணம் இதுதான்!