நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக பாதுக்கப்புத்துறையின் கீழே மிஷன்வட்சல்யா திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள  பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த) பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.


பணி விவரம்:


பாதுகாப்பு அலுவலர் 


கல்வித் தகுதி: 



  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமூகப்பணி/சமூகவியல்/குழந்தைகள் மேம்பாடு/மனித உரிமைகள் பொது நிர்வாகம் /உளவியல்/ சுகாதாரம் /சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ( முதுகலைப் பட்டம் Social Work /Sociology / Child Development/ Human Rights Public Administration / Psychology/Psychiatry/Law/Public Health / Community Resource Management from arecognized University)) இதே துறையில் இளங்கலை பட்டம் படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  • சுகாதாரம் / சமூக வளம் திட்ட உருவாக்கம் /செயல்படுத்தல் ,கண்கானிப்பு மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகள் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • கணினி பயன்படுத்துவத்த தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


விண்ணப்பிப்பது எப்படி?


https://www.nagapattinam.nic.in/ - என்ற இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர், தேவையான சான்றிதழ் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
அறை எண்-209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 
நாகப்பட்டினம்- 611003


விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.08.2023 (மாலை 5.45 மணிக்குள்)


தொடர்புக்கு - 04365 253018




மேலும் வாசிக்க..


Working Womens Hostel: தமிழ்நாடு முழுவதும் குறைவான கட்டணத்தில் அரசு பெண்கள் விடுதிகள்; இதோ முகவரி... சேர்வது எப்படி? முழுத் தகவல்


Jailer: ஜெயிலர் படத்தில் இதையெல்லாம் மாற்ற வேண்டும் - ரத்த காட்சிகளால் உத்தரவிட்ட தணிக்கை குழு