Job Alert: தகுதித் தேர்வுகள் இல்லை; சென்னையில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!

Job Alert: சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தினை இங்கே காணலாம்.

Continues below advertisement

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

Continues below advertisement

அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

வழக்கு அலுவலகர்கள் (Case Worker) - 3

பாதுகாப்பாளர் (Security Guard)-1

பன்முக உதவியாளார் (Multi Purposer Helper) - 2

மொத்த பணியிடங்கள் - 6

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • வழக்கு அலுவலர்கள் பணிக்கு விண்ணபிக்க  ’Social Work’ துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 ஆண்டு முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • பாதுகாப்பு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  • வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
  • பன்முக உதவியாளார் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமையல் தெரிந்திருக்க வேண்டும். சென்னையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

  • வழக்கு அலுவலர்கள் - ரூ.15,000
  • பாதுகாப்பாளார் - ரூ.10,000
  • பன்முக உதவியாளர்- ரூ.6,400

வயது வரம்பு:

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 

 மின்னஞ்சல் முகவரி - chndswosouth@gmail.com 

 முகவரி

சமூகநல அலுவலகம், 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். 
8-வது தளம். சிங்காரவேலர் மாளிகை, 
இராஜாஜி சாலை, சென்னை-01 

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/03/2024030417.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/03/2024030447.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் - 13.03.2024


மேலும் வாசிக்க..

CBSE Recruitment: சி.பி.எஸ்.இ. வேலை! வரும் 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - தகுதி என்ன? முழு விவரம்!

AAI Recruitment: பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? 490 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

Continues below advertisement