சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் தாய்சேய் நல மருத்துவமனையில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.


பணி விவரம்:


 வார்டு மேலாளர் (Ward Manager)


கல்வி மற்றும் பிற தகுதிகள்:


இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரியில் ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்ப்டுத்த தெரிந்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி?


விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் சான்றிதழ்களின் நகல்களுடன், புகைப்படம் அகியவற்றோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும். 


கவனிக்க..


இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 11  மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளன. எக்காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட்டமாட்டாது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:


இயக்குதர் மற்றும் பேராசிரியர்.


மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும்


அரசு தாய் சேய் நல மருத்துவமனை


எழும்பூர் சென்னை -600008.


விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.05.2023




Job Alert: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? தகுதித் தேர்வுகள் இல்லை; என்ன வேலை? எப்படி விண்ணப்பிப்பது?


Job Alert: டிகிரி படித்தவர்களா? அரசு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! முழு விவரத்திற்கு இதைப் படிங்க!