தமிழ்நாட்டில் மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. நேற்றைய தினம் சென்னை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


கொரோனா பாதிப்பு:


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில் தமிழ்நாட்டில் க்ளஸ்டர் பாதிப்புகள் இல்லை, தனி மனித பாதிப்பு தான் இருக்கிறது என தெரிவித்தார்.


கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி பாதிப்பு 300க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது அது 500-ஐ கடந்து பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 514 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு 3,195 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 366 பேர் கொரோனாக்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.


பாதிப்பு நிலவரம்:


அதேபோல் சென்னையை சேர்ந்த 60 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பரிசோதனை 11 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி பொது சுகாதார துறை தரப்பில் மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. நேற்று தமிழ்நாடில் 5,988 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 514 மாதிரிகளில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 36,02,215 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 138 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 242 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 881 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தொற்று பரவும் சதவீதம் மெதுவாக உயர்ந்து வருகிறது. மார்ச் மாதம் தொற்று சதவீதம் 10% கீழ் இருந்த நிலையில், கன்னியாகுமரி – 11.8%, திருவள்ளூர் – 11.0%, செங்கல்பட்டு – 10.9%, கோவை – 10.6%, சென்னை – 10.4%, சேலம் – 10.5%, திருப்பூர் – 9.4%, ராணிபேட் – 9.1 % ஆக பதிவாகியுள்ளது. கொரோனாவின் Xbb 1.16 மற்றும் ba2 என்ற புதிய வைரஸ் மாறுபாடு தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்தால் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொரோனா மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்தபோது தெரிவித்தார்.  


Maharashtra Public Death: அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சி.. வெயிலில் சுருண்டு விழுந்து 13 பேர் பலி.. மகாராஷ்டிராவில் பரிதாபம்


மோகன்லால் - லிஜோ ஜோஸ் கூட்டணி சேர்ந்துள்ள ’மலைக்கோட்டை வாலிபன்’... ஃபர்ஸ்ட் லுக் செய்த சாதனை!