மணிரத்னத்தின் கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு ரிலீசுக்குத் தயாராக உள்ளது.முன்னதாக நடைபெற்ற படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட் மற்றும் இந்திய சினிமாவின் பெரும் நட்சத்திரங்கள் சங்கமித்து கொண்டாடித் தீர்த்தது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது.






விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முன்னதாக படத்தின் ஓடிடி உரிமையை 125 கோடி ரூபாய்க்கு அமேசான் நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வனில் நடித்துள்ள நடிகர்கள் அவ்வப்போது கதாபாத்திரமாகவே மாறி ட்வீட் செய்து வருகின்றனர்.






இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷாவை டேக் செய்து சோழனாகவே மாறி ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், ''சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா'' எனக் குறிப்பிட்டுள்ளார்.