கொரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். அதேபோல் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கான படப்பிடிப்புகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் தொகுப்பாளர்களும் தங்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு யூடியூப் சேனல் அல்லது தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் என்று தங்களின் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதன் மூலம் தாங்கள் செய்வதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.


அந்த வகையில் பிரபல டிவி தொகுப்பாளினி மற்றும் பிக்பாஷ் போட்டியாளர் அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், "நான் படித்த படிப்புக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. அதனால் விஜய் டிவியில் வேலைசெய்து வந்தேன். அதற்கு உங்களிடம் இருந்து திட்டு வாங்க முடியவில்லை. எனவே நான் தற்போது ஒரு புதிய வேலை செய்ய தொடங்கியுள்ளேன்" எனக் கூறி அவர் மாடு மேய்க்கும் காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 






அவரின் இந்த வீடியோவிற்கு பலரும் லைக் மற்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். குறிப்பாக பிக்பாஷ் போட்டியாளரும் நடிகருமான ஜித்தன் ரமேஷ், "நீங்கள் எந்த வேலையா இருந்தாலும் சிறப்பாக செய்கிறீர்களே நிஷா " என்று நக்கலாக ஒரு கமெண்ட்டை பதிவு செய்துள்ளார். 


 






இது தவிர, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது போலவும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் காமெடியில் கலக்கி நிஷா பிரபலம் அடைந்தார். அதன்பின்னர் அந்தத் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் வலம் வந்தார். மேலும், தனுஷ் நடிப்பில் மாரி 2 திரைப்படத்திலும் நடித்திருந்தார். அத்துடன் விஜய் டிவி நடத்திய பிக்பாஷ் சீசன் 4-இல் ஒரு போட்டியாளராகவும் நிஷா  களமிறங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ”ஏன் சமைக்கணும்னு அம்மாகிட்ட சண்டைபோட்டேன்” - பாலின பாகுபாடு குறித்து வித்யா பாலன் ஷார்ப்!