Rakshita: பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் 'மதுர' பட நாயகி.. இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?

Rakshita : சிம்பு, விஜய் ஜோடியாக நடித்து அத்துடன் தமிழ் சினிமாவில் இருந்து விலகிய நடிகை ரக்ஷிதா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா ?

Continues below advertisement

தமிழ் சினிமாவில் விரல் விட்டு எனும் அளவிலான படங்களில் மட்டுமே நடித்து காணாமல் போன நடிகைகள் ஏராளம். அந்த பட்டியலில் இடம்பெற்ற நடிகைகளில் ஒருவர்தான் சிம்பு, விஜய் படங்களின் ஹீரோயினாக நடித்த நடிகை ரக்ஷிதா.

Continues below advertisement

ஸ்வேதா என்ற தன்னுடைய பெயரை சினிமாவுக்காக ரக்ஷிதா என மாற்றிக்கொண்டார். அவரின் அப்பா ஒரு பிரபலமான சினிமாடோக்ராஃபராக இருக்க அவரின் அம்மா மம்தா ராவ் ஒரு பிரபலமான நடிகையாக இருந்துள்ளார். அதனால் ரக்ஷிதாவுக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்துள்ளது. 

 


கன்னட திரையுலகில் புனித் ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான 'அப்பு' படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கன்னட சினிமாவில் அறிமுகமான ரக்ஷிதாவுக்கு உடனே தமிழ் சினிமாவில் இருந்து அழைப்பு வந்தது. தமிழ் சினிமாவில் சிம்பு ஜோடியாக 'தம்' படத்தில் அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற 'சாணக்யா சாணக்யா ஏதோ மந்திரம் செய்தாய்...' என அனைவரையும் மந்திரம் போட்டதுபோல ஆட்டிவைத்தார். அப்பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான உடனே விஜய் ஜோடியாக 'மதுர' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சோனியா அகர்வாலும் அப்படத்தின் ஒரு ஹீரோயினாக இருந்தாலும் மெயின் ஹீரோயினாக ரக்ஷிதா தான் நடித்திருந்தார். இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் ரக்ஷிதா பற்றியும் அவரின் தற்போதய நிலை குறித்தும் பார்க்கலாம். 

 

'மதுர' திரைப்படத்தோடு தமிழ் சினிமாவுக்கு ஒரு முழுக்கு போட்டு விட்டு கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவந்தார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, ரவி தேஜா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார். கன்னடத்தில் படங்களை தயாரித்தும் உள்ளார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு நடிக்க வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்கினார் ரக்ஷிதா. கன்னட இயக்குநர் பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு முழுமையாக நடிப்பில் இருந்து விலகிய ரக்ஷிதா குடும்பத்தை கவனித்து வந்தார். இந்த தம்பதியினருக்கு மகன் ஒருவர் உள்ளார். 

 

 

இந்நிலையில் சமீபத்தில் ரக்ஷிதா தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அந்த அளவுக்கு ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அதை பார்த்த திரை ரசிகர்கள் இது மதுர பட ஹீரோயினா என அதிர்ந்து போய்விட்டார்கள்.  

Continues below advertisement
Sponsored Links by Taboola