பாட வந்த தீபா.. சாமுண்டீஸ்வரியை கொல்ல நெருங்கிய ரவுடி, கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட் என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் சங்கரபாண்டி வைத்த பழத்தை சிவா கிளி எடுக்க மாரிக்கு விஷனில் சாமுண்டீஸ்வரியை யாரோ குத்த வருவது போன்று தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது தீபா மாரி ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவில் பாட வந்து பாடி கொண்டிருக்க மாரி சாமுண்டீஸ்வரி அம்மாவுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று பதற்றத்தில் இருக்க சூர்யா சாமுண்டீஸ்வரி அம்மாவை யார் பின் தொடர்வது என்று நோட்டம் விட்டபடி இருக்க ரவுடி ஒருவன் சுற்றி கொண்டிருப்பதை கவனிக்கிறான். 


அந்த ரௌடி சாமுண்டீஸ்வரியை குத்த போக தடுத்தும் நிறுத்தும் சூர்யா அவனை பிடிக்க எஸ்கேப் ஆகும் ரவுடி தாராவுக்கு போன் செய்து குத்த போன கடைசி நொடியில் அந்த சூர்யா வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டான். என்னை நம்பி குடுத்த வேலையை என்னால செய்ய முடியாமல் போய்டுச்சு, இதுவரை எனக்கு இப்படி நடந்ததே இல்லை. 


என்னையே மண்ணை கவ்வ வைத்த அந்த சூர்யாவை சும்மா விட மாட்டேன் என்று ரவுடி கோபப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? ரவுடி சூர்யாவுக்கு எதிராக செய்ய போவது என்ன? என்பது குறித்து அறிய மாரி சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து  தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க 


RK Suresh: இந்தியாவில் எனக்கு தெரியாத அரசியல்வாதியே கிடையாது.. நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேச்சு


Mohan G: ”என்னோட கஷ்டத்தை புத்தகம் எழுதினால் கூட பத்தாது” : இயக்குநர் மோகன் ஜி வேதனை


RK Suresh: சாதிய உணர்வு தப்பில்லை.. எல்லாரும் ஒன்றுதான்.. நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேச்சால் பரபரப்பு