விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 


விஜயா அண்ணாமலையிடம் சென்று முத்து ஆட்டோ ஓட்டுவதை பார்வதி பார்த்து விட்டு வந்து சொன்னதாக சொல்கிறார். ”இதுக்குதான் பத்திரத்தை அடகு வச்சு அவனுக்கு கார் வாங்கி கொடுத்திங்களா?” என விஜயா கேட்கிறார். மீனா சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது முத்து ஆட்டோ ஓட்டுவதை பார்த்து விடுகிறார். 


மீனா வீட்டுக்குச் சென்றதும் விஜயா, ”மீனாவைப் பார்த்து நல்லா சுத்திட்டு வரிங்க போல” என்கிறார். முத்து ஆட்டோ ஓட்டுவதை குடும்பத்தினர் எல்லோர் முன்னிலையிலும் விஜயா சொல்கிறார். உடனே மனோஜ் கிண்டலாக பேசுகிறார். ”காரை வித்துட்டு ரோடு ரோடா ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கான்” என்கிறார் விஜயா. 


”நிஜமாவே ஆட்டோ தான் ஓட்டுறியா” என முத்துவிடம் கேட்கிறார் அண்ணாமலை. ஆமாப்பா என சொல்கிறார் முத்து. ”இவரு காரு வித்த மறச்சி இருக்காரு, இவரு செஞ்சா சரி மத்தவங்க பண்ணா தப்பா?” என ரோகினி கேட்கிறார். விஜயா, ஸ்ருதி, மனோஜ் என ஆளாளுக்கு கேள்வி கேட்கின்றனர். ”காரை வித்துட்டியா?” என அண்ணாமலை முத்துவிடம் கேட்கிறார். 


”ஒரு தேவை இருந்துச்சிப்பா அதான் வித்துட்டேன், அதெல்லாம் சொன்னா நீ வருத்தப்படுவப்பா” என்கிறார் முத்து. ”உன் பொருளை நீ அடமானம் வெச்சிருந்தா யாரும் கேட்க போறது இல்ல. வீட்டு பத்திரத்தை வச்சி வாங்கின காரை ஏன் வித்த?” என விஜயா கேட்கிறார். ”அது என் வீட்டு பத்திரத்தை வச்சு வாங்கின காரு அப்போ வித்த பணத்தை ஏன் கிட்ட தானே கொடுக்கனும்” என்கிறார் விஜயா. 


”27 லட்சம் எடுத்துட்டு ஓடுனான் இல்ல மனோஜ். அதை குடுக்க சொல்லுங்க அடுத்த நொடியே நான் கொடுக்குறேன்” என்கிறார் முத்து. உடனே மனோஜ் அங்கிருந்து ஓடி விடுகிறார். கார் வித்ததற்கான காரணத்தை அப்புறம் சொல்வதாக சொல்லி விட்டு முத்து செல்கிறார். ”மாமா பத்திரத்தை வச்சி உங்களுக்கு கார் வாங்கி கொடுத்தாரு. அதை வித்து இருக்கிங்க. என்ன காரணம்னு சொல்லுங்க” என்கிறார். ”பொண்ணுங்க வெளிய போனா ஆயிரம் கேள்வி கேட்குறது. ஒரு பையன் போனா யாரும் எதுவும் கேட்பதில்லை” என முத்து சத்யா குறித்து சொல்கிறார். 


”என்தம்பி எதோ கொள்ளை அடிக்குற மாதிரி பேசிகிட்டு இருக்கிங்க. இப்போ நீங்க ஏன் காரை வித்திங்கனு சொல்லுங்க அதை விட்டுட்டு என் தம்பியப் பத்தி ஏன் பேசிகிட்டு இருக்கிங்க” என்கிறார் மீனா. முத்து அங்கிருந்து சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.