தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராம் வீட்டுக்கு வர, மகா நல்லவள் போல் வேஷம் போட்ட பிறகு, ராம் மற்றும் சீதா இருவரும் இரவு நேரத்தில் வெளியே நடந்து வருகின்றனர். 


அப்போது ஓரிடத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக ஐஸ்காரரை கூப்பிட, அதே சமயம் அதே ஐஸ்காரனை சீதாவை கடத்திய ரவுடியும் கூப்பிடுகிறான். பிறகு சீதா அந்த ரவுடியை கவனித்து விட்டு ராமிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசிக்கிறார். 


ஒரு கட்டத்தில் ராமிடம் அவன் தான் என்னைக் கடத்தியது என்று சொல்ல, அவன் ரவுடியை துரத்தி கொண்டு செல்லும் போது அவனுடைய செல்போனை தவற விட்டுச் சென்று விடுகிறான். போனில் மகா என்ற பெயரில் அர்ச்சனாவின் நம்பர் சேவ் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து ராம் அதிர்ச்சி அடைகிறான். 


உடனே அந்த நம்பருக்கு போன் போட்டு பேச அர்ச்சனா எடுக்க, ராம் எதுவும் பேசாமல் போனை கட் செய்து விட்டு இதையெல்லாம் செய்தது அர்ச்சனா தான் என நினைத்து கண் கலங்குகிறான். 


பிறகு அர்ச்சனா மகாவிடம் ரவுடி போன் பண்ணதாக சொல்ல, மகா நான் பேசுறேன் என திருப்பி போன் பண்ண ராம் போனை எடுக்காமல் விட்டு விடுகிறான். அதன் பிறகு சீதாவுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து வீட்டிற்கு கூட்டி வருகிறான். 


வீட்டுக்கு வந்த ராம் தூக்கம் வராமல் தவிக்க இந்த விஷயத்தை சித்தியிடம் சொல்லிவிடலாம் என்று முடிவெடுக்கிறான். 


பிறகு அவன் மகாவிடம் சொல்ல அர்ச்சனா, சித்தப்பா சுபாஷ் என எல்லாரையும் வீட்டை விட்டு அனுப்புவது போல நினைத்துப் பார்த்து இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என முடிவெடுத்து மறைத்து விடுகிறான். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Premalatha Vijayakanth: கேப்டன் மீது என்ன வன்மம்... வதந்தி பரப்பாதீங்க.. கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்!


Cyclone Michaung: வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னைவாசிகள்! மக்களைத் தேடிச்சென்று உதவிய பிரபலங்கள் இவர்கள்தான்!