தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சீதா தன்னை காக்க வைத்த மகாவுக்கு பதிலடி கொடுக்க சாப்பாட்டை மேலே எடுத்து வர முடியாது என்று ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, துரையை அனுப்ப அப்போதும் சீதா வர மறுக்க அதன் பிறகு வேறு வழியின்று மகா மற்றும் அர்ச்சனா என இருவரும் கீழே வந்து சாப்பாட்டை மேலே எடுத்து சென்று சீதாவை பரிமாற சொல்லி கொடுமைப்படுத்துகின்றனர். இதையெல்லாம் பார்த்த துரை சீதாவிடம் ராமுக்கு விஷயத்தை சொல்லிடலாம் என்று சொல்ல சீதா மறுப்பு தெரிவிக்கிறாள்.


வீட்டில் நடக்கும் விஷயங்களை நினைத்து சீதா சோகமாக இருக்க ராம் போன் செய்ய தனக்குள் இருக்கும் வலியையும் வேதனையும் மறைத்தபடி பேசுகிறாள். இருந்தாலும் ராம் ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை என சமாளித்து போனை வைத்து விட்டு ராம் போட்டோவை பார்த்து கண் கலங்கி அழுகிறாள்.


மறுநாள் காலையில் சீதா தூங்கி கொண்டிருக்க அஞ்சலி, ப்ரியா, காவியா என மூவரும் அவள் மீது தண்ணீரை ஊற்றி தூக்கத்தில் இருந்து எழுப்பி வெளியே இழுத்து வர சீதா மகா சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு கோலம் போடு என சொல்கிறாள், நீங்க சொல்லி என்னால் போட முடியாது என சீதா பதிலடி கொடுக்கிறாள். இதனால் மகாவுக்கும் சீதாவுக்கு இடையே வாக்குவாதம் உருவாகுகிறது. ஒரு கட்டத்தில் மகா செக்யூரிட்டியை கூப்பிட்டு நீ கோலம் போடுற வரைக்கும் இவனை அடிச்சிட்டே இருப்பேன் என அடிக்க தொடங்குகிறாள்.






இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க 


Uttarkashi Tunnel Rescue: 17 நாட்கள் இருட்டில் நடந்தது என்ன? - விவரிக்கும் மீட்கப்பட்ட தொழிலாளி விஸ்வஜீத் குமார்


Virat Kohli: மார்ச் வரை ரெஸ்ட்! டி20, ஒருநாள் போட்டிகளில் ப்ரேக் எடுக்கும் விராட் கோலி? ரசிகர்கள் அப்செட்..