தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. 


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் விக்ரமை பார்க்கப் போன மாரியை ரவுடிகள் கடத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது ஆபீஸிலிருந்து சூர்யா வெளியே வர மாரியே திசை திருப்பிய அந்த நபரிடம் வந்து “மாரியையா தேடறீங்க? அவங்க விக்ரமுக்கு நெஞ்சு வலி என்று தெரிஞ்சு அவரை பார்க்க போய்ட்டாங்க” என சொல்கிறான். உடனே சூர்யா விக்ரமுக்கு போன் போட்டு விசாரிக்க, அவன் தனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என சொல்கிறான்.


அதே சமயம் விக்ரம் வீட்டுக்கு வரும்போது அவனை ஒரு கார் கிராஸ் செய்ததும் அதில் ரவுடிகள் இருந்ததையும் நினைவுகூர்ந்து மாரியை கடத்தியது அவர்கள் தான் என பின் தொடர தொடங்குகிறான். 


மயக்கத்தில் இருந்து மாரி கண்விழிக்க தான் கடத்தப்படுவதை அறிந்த அவள் தன்னைக் காப்பாற்றுவதற்காக ஒரு தடயத்தை உருவாக்க வேண்டும் என முந்தானையில் முடிந்து வைத்த கற்பூரத்துடன் பூவை கலந்து போகும் வழி எல்லாம் போட்டுக் கொண்டே செல்கிறாள். 


அங்கு வந்த சூர்யா இது மாரி உருவாக்கிய தடைகள் தான் என்று விக்ரமை அழைத்துக் கொண்டு பின் தொடர்ந்து சென்று ஒரு வீட்டுக்குள் கட்டி வைக்கப்பட்டிருக்கும் மாரியை ரவுடிகளிடம் சண்டை போட்டு மீட்கிறான். 


அதே சமயம் மறுபக்கம் தாரா ஆபீஸில் அந்த சாராய பிசினஸ் டீலிங்கில் கையெழுத்து போட்டு முடிக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது. 


மேலும் படிக்க: Archana: இவர் ஓவியா இல்ல ஜூலி.. பொம்மை டாஸ்க்கில் விசித்ராவிடம் வன்மம் கொட்டிய அர்ச்சனா.. அதிருப்தியில் ரசிகர்கள்!


Bigg Boss Tamil 7: நீ நல்லவன்னா அவனும் நல்லவன் தான்.. அர்ச்சனாவுக்கு பதிலடி தந்த நிக்சன்.. துள்ளிக் குதித்த ஹவுஸ்மேட்ஸ்!