ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக்கு ஆபிஸ் பற்றி எரிவதாக போன் வர அவன் சென்னை கிளம்ப மாரிக்கு கோயிலில் நடக்கப் போகும் அசம்பாவிதம் பற்றி தெரிய வந்தது. 


இதனைத் தொடர்ந்து இன்றும் ஞாயிற்று கிழமையான நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, தீபா அப்படியே ஊர்வலமாக வந்து கொண்டிருக்க, கார்த்திக் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறான். மாரி பரமேஸ்வரி பாட்டியை சந்தித்து கோயிலில் நடக்கப் போகும் அசம்பாவிதம் பற்றி சொல்லி உங்களால் மட்டும் தான் இதைத் தடுத்து நிறுத்த முடியும் என அதிர்ச்சி கொடுக்கிறாள். 


அடுத்ததாக பரமேஸ்வரி பாட்டி கூட்டத்தோடு கூட்டமாக ஊர்வலத்தில் வர, அங்கு கார்த்தியை காணாத காரணத்தினால் அவனுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல முடிவெடுக்கிறாள். கார்த்திக் திடீரென காரை நிறுத்தி ஆபிஸூக்கு போன் போட்டு விசாரித்து, அங்கு ஒரு பிரச்னையும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்கிறான். 


இந்த நேரம் பார்த்து பாட்டி அவனுக்கு போன் போட்டு உடனடியாக கிளம்பி வர சொல்ல, அவனும் கிளம்பி வருகிறான். இங்கே பூசாரி தீபாவை வெட்டப் போக உண்மையாக தீபாவுக்கு சாமி வந்து விட, அவள் “என்னய்யா வெட்ட பாக்குற” என பூசாரியின் கழுத்தைப் பிடித்து தூக்கி வீசி ஆக்ரோஷமாக ஆட எல்லாரும் தீபாவிடம் அருள்வாக்கு கேட்கின்றனர். 


பிறகு தீபா ஐஸ்வர்யாவைக் கூப்பிட்டு அவள் கையில் சூடத்தை வைத்து “ஆத்தா உன் கையால் தான் தீபத்தை காட்ட சொல்றா, இதைக் கீழே போட்ட தெய்வகுத்தமாகிடும்” என மிரட்ட ஐஸ்வர்யா வேறு வழியில்லாமல் கையில் சூடத்தை ஏந்தி தீபம் காட்டுகிறாள். பிறகு இவள் மேல் வந்திருப்பது உண்மையான சாமியா என்பதை கண்டுபிடிக்க தீபாவின் புடவையில் தீ பிடிக்க ஏற்பாடு செய்கிறாள். 


இப்படியான நிலையில் இந்த வாரம் கார்த்திகை தீபம் சீரியல் நிறைவடைகிறது. 




மேலும் படிக்க: Killers Of The Flower Moon Review: கருப்புத் தங்கத்துக்காக நிகழ்ந்த கொடூரங்கள்.. ‘கில்லர்ஸ் ஆப் தி ஃப்ளவர் மூன்’ பட விமர்சனம்!


Vikraman Wife: 5 ஆண்டுகளாக படுத்தபடுக்கையாக இருக்கும் இயக்குநர் விக்ரமன் மனைவி.. சொத்தை வித்து மருத்துவ செலவு பார்க்கும் சோகம்!